ஆப்நகரம்

வீடு கட்ட மானியம்... இனி காப்பீடும் சேர்ந்து கிடைக்கும்?

மத்திய அரசின் வீட்டு வசதித் திட்டத்தில் பயனாளிக்கு காப்பீடு வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 31 Jul 2021, 9:20 pm
வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்காக மத்திய மோடி அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் மிக முக்கியமான திட்டம்தான் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம். இத்திட்டத்தின் கீழ் வீடற்ற ஏழை எளிய மக்கள் மானியத்துடன் கூடிய கடனுதவியைப் பெறலாம். இத்திட்டத்தின் கீழ் ரூ.2.67 லட்சம் வரையில் மானிய உதவி வழங்கப்படுகிறது.
Samayam Tamil house


2022ஆம் ஆண்டுக்குள் எரிவாயு, மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் நிறைந்த 20 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளைக் கட்டி முடிக்க இத்திட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்தியாவில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீட்டுக் கடன்களுக்கான வட்டி மானியங்களையும் இத்திட்டம் வழங்குகிறது.

சமையல் சிலிண்டருக்கு மானியம் வருதா, இல்லையா? உடனே செக் பண்ணுங்க!
இந்நிலையில், பிஎம் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் பயன்பெறுவோருக்கு மேலும் ஒரு சலுகை கிடைக்கவிருக்கிறது. அதாவது ஆவாஸ் யோஜனா திட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் திடீரென இறந்துவிட்டாலோ அல்லது விபத்து போன்றவற்றால் உடலில் குறைபாடு ஏற்பட்டாலோ அவர்களுக்கு காப்பீடு வழங்க ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதற்கான கோரிக்கையை இந்திய தொழில் துறை கூட்டமைப்பு அரசிடம் வைத்துள்ளது. இக்கோரிக்கை ஏற்கப்பட்டால் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் இனி வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டு உதவியும் கிடைக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்