ஆப்நகரம்

2000 ரூபாய் எப்போது கிடைக்கும்? நீங்களே செக் பண்ணலாம்... ஈசி வழி இதோ!!

பிஎம் கிசான் திட்டத்தின் 10ஆவது தவணைப் பணம் தாமதமாகியுள்ளது. அதன் அப்டேட்டை செக் பண்றது எப்படி?

Samayam Tamil 22 Dec 2021, 11:20 am
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள நலிந்த விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என மொத்தம் மூன்று தவணைகள் ஒரு ஆண்டில் வழங்கப்படுகின்றன.
Samayam Tamil pm kisan


இதுவரையில் மொத்தம் 9 தவணைகள் வழங்கப்பட்டுவிட்ட நிலையில் 10ஆவது தவணை இந்த டிசம்பர் மாத மத்தியில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களுக்காக நிதியுதவி இன்னும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவில்லை. டிசம்பர் மாதம் முடிவதற்குள் பணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் நிறைய விவசாயிகள் தங்களது ஸ்டேட்டஸ் நிலவரத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகின்றனர். பணம் வருமா, வராதா என்ற சந்தேகமும் பலருக்கு இருக்கிறது. நிதியுதவி பெறுவதற்கான தகுதி உள்ளதா, விண்ணப்ப கோரிக்கை நிராகரிக்கப்பட்டதா என்று தெரிந்துகொள்ள விரும்புவார்கள். அதை ஆன்லைன் மூலமாகவே மிக எளிதாகத் தெரிந்துகொள்ளலாம்.

விவசாயிகளுக்கு பணம் வேணும்னா இதைச் செய்யணும்: அரசு உத்தரவு!
pmkisan.gov.in என்ற வெப்சைட்டில் சென்று 'Beneficiary Status' என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.

அதில், ஆதார் நம்பர், மொபைல் நம்பர், அக்கவுண்ட் நம்பர் ஆகிய ஆப்சன்கள் இருக்கும். ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து 'Get Data' என்பதை கிளிக் செய்யவும்.

இப்போது உங்களுடைய 10ஆவது தவணைப் பணம் குறித்த அப்டேட்டை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

பிஎம் கிசான் மொபைல் ஆப் மூலமாகவும் நீங்கள் உங்களுடைய ஸ்டேட்டஸ் நிலவரத்தை தெரிந்துகொள்ள முடியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்