ஆப்நகரம்

விவசாயிகளுக்கு 2000 ரூபாய்.. மத்திய அரசின் முக்கிய அப்டேட்!!

சரிபார்ப்புக்கான விதிமுறை மாற்றப்பட்டுள்ளது.

Samayam Tamil 29 Jun 2022, 9:04 am
பிஎம் கிசான் திட்டத்தில் பயனாளியின் நிலையை சரிபார்ப்பதற்கான வழிமுறை மாற்றப்பட்டுள்ளது. இனி மொபைல் நம்பர் இருந்தால்தான் பார்க்க முடியும்.
Samayam Tamil pm kisan beneficiary status check method changed now mobile number is must
விவசாயிகளுக்கு 2000 ரூபாய்.. மத்திய அரசின் முக்கிய அப்டேட்!!


பிஎம் கிசான் திட்டம்!

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (பிஎம் கிசான்) திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஒரு தவணைக்கு 2,000 ரூபாய் என மொத்தம் மூன்று தவணைகள் ஒவ்வொரு ஆண்டிலும் வழங்கப்படுகின்றன.

11ஆவது தவணை!

பிஎம் கிசான் திட்டத்தின் 11ஆவது தவணைப் பணம் சென்ற சென்ற மாத இறுதியில் வழங்கப்பட்டது. 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இந்த நிதியுதவியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். அடுத்து 12ஆவது தவணை எப்போது வரும் என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

பணம் வரவில்லை!

விவசாயிகள் சிலருக்கு 11ஆவது தவணைப் பணம் இன்னும் வரவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. தகுதியுடைய விவசாயிகளுக்கு நிதியுதவி சரியாக வந்துவிடும். இதற்கு ஆதார் முக்கியம். சில நேரங்களில் ஆதார் எண், மொபைல் நம்பர், வங்கிக் கணக்கு எண் போன்ற விவரங்கள் தவறாக வழங்கப்பட்டிருந்தாலும் நிதியுதவி வந்து சேராது. எனவே முதலில் இந்த விவரங்கள் சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

பிஎம் கிசான் வெப்சைட்!

எல்லாம் சரியாக இருந்து பணம் வராமல் இருந்தால் பிஎம் கிசான் வெப்சைட்டிலேயே அதை சரிபார்க்க முடியும். இதற்காக எங்கும் அலையத் தேவையில்லை. வீட்டில் அமர்ந்தபடியே ஆன்லைன் மூலமாகப் பார்க்கலாம். www.pmkisan.gov.in என்ற வெப்சைட்டில் சென்று பார்க்கலாம். அதில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தாலும் செய்யலாம்.

முக்கியமான அப்டேட்!

பயனாளிகளுக்கு பணம் வருவது தொடர்பான நிலையை பிஎம் கிசான் வெப்சைட்டில் சென்று ’farmers corner’ என்ற வசதியை கிளிக் செய்து அதில் ’beneficiary status’ என்ற ஆப்சனில் பார்க்கலாம். ஆனால் இதில் இதற்கு முன்னர் ஆதார் நம்பரைக் கொடுத்தாலே போதும். ஆனால் இனி மொபைல் நம்பர் கொடுத்தால்தான் பார்க்க முடியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்