ஆப்நகரம்

pm kisan: விவசாயிகளுக்கு ரூ.2000 நாளை வரப்போகுது.. உங்கள் விவரங்களை செக் பண்ணிக்கோங்க!

பிஎம் கிசான் திட்டத்தின் 16 ஆவது தவணைத்தொகை பிப்ரவரி 28 ஆம தேதி விவசாயிகள் கணக்கிற்கு நேரடியாக வழங்கப்படும் என அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Authored byநா. லோகநாயகி | Samayam Tamil 27 Feb 2024, 12:52 pm
விவசாயிகள் அனைவருக்கும் எதிர்பார்த்து காத்திருந்த பிஎம் கிடான் உதவித்தொகை நாளை அவர்கள் வங்கிக் கணக்கிற்கு ரூ.2000 உதவித்தொகை நேரடியாக கொடுக்கப்படும். விவசாயிகளுக்கு 16வது தவணை பிப்ரவரி 28, 2024 அன்று வழங்கப்படும் என மத்திய அரசு உறுதி செய்துள்ளது. PM கிசான் பலன்களைப் பெற விவசாயிகள் eKYC ஐ முடிக்க வேண்டும்.
Samayam Tamil pm kisan yojana


தவணை விடுவிக்கப்பட்ட பிறகு, தகுதியான விவசாயிகளுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.2,000 வழங்கப்படும். பிரதம மந்திரி கிசான் தொகை ஆண்டுதோறும் ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் டிசம்பர்-மார்ச் ஆகிய மூன்று தவணைகளில் நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். பிரதமர் கிசான் திட்டத்தின் 16வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை வெளியிடுகிறார்.

PM Kisan Samman Nidhi Yojana (PM-Kisan) 16வது தவணை வெளியீடு பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வ PM Kisan இணையதளத்திலும் அதன் சமூக ஊடக சேனல்களிலும் கிடைக்கின்றன. பிகே கிசான் யோஜனாவின் 15 வது தவணை நவம்பர் 15 அன்று பிரதமர் மோடியால் வழங்கப்பட்டது மற்றும் தவணையின் ஒரு பகுதியாக 18,000 கோடி ரூபாய் 8 கோடி பயனாளி விவசாயிகளை சென்றடைந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பிரதம மந்திரி கிசான் யோஜனா தொடர்பான ஏதேனும் சிக்கலை விவசாயிகள் எதிர்கொண்டால், pmkisan-ict@gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது பின்வரும் ஹெல்ப்லைன் எண்கள் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்: 155261 அல்லது 1800115526 (கட்டணமில்லா) அல்லது 011-23381092 என்ற எண்ணிற்கு கால் செய்யவும்.


PM KISAN யோஜனா: விண்ணப்பிப்பது எப்படி!

1. முதலில் pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்

2. முகப்புப் பக்கத்தில், 'புதிய விவசாயி பதிவு' என்பதைக் கிளிக் செய்து, ஆதார் எண்ணை உள்ளிட்டு கேப்ட்சாவை நிரப்பவும்.

3. இங்கே நீங்கள் தேவையான விவரங்களை உள்ளிட்டு 'ஆம்' என்பதைக் கிளிக் செய்யவும்.

4. தொடர்புடைய பக்கத்தில், PM-Kisan விண்ணப்பப் படிவம் 2023 இல் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, அதைச் சேமித்து, எதிர்கால குறிப்புக்காக அச்சிடவும்.
எழுத்தாளர் பற்றி
நா. லோகநாயகி
நான் லோகநாயகி. நான் முதுகலை வணிக மேலாண்மை மற்றும் எம்.ஏ. பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பு பட்டப்படிப்பும் முடித்துள்ளேன். எனக்கு பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். தற்பொழுது வர்த்தகம், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், கிரிப்டோ கரன்சி, பொருளாதாரம், அரசு கொள்கைகள், வருமான வரி, உலக வணிகங்கள் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். தற்போது சமயம் தமிழில் Digital Content Producer ஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்