ஆப்நகரம்

இன்று விவசாயிகள் கணக்கில் ரூ.2000 போடப்படும்.. பிரதமரின் அதிரடி அறிவிப்பு!!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் (PM-KISAN) யோஜனா (திட்டம்) 12 - ஆவது தவணைத் தொகையை பதிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

Samayam Tamil 30 Sep 2022, 12:01 pm
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவுக்கான பதிவு நடைமுறையில் மத்திய அரசு சமீபத்தில் சில மாற்றங்களைச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் கீழ், பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தில் பதிவு செய்ய உங்களின் ரேசன் கார்டு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
Samayam Tamil PM kissan samman


அதுமட்டுமின்றி விவசாயிகளில் படிக்காதவர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் மூன்று சம தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000 வருமானத்தை அரசிடமிருந்து பெறுகிறார்கள். 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும்/உரிமை பெற்ற சிறு மற்றும் குறு விவசாயி குடும்பங்களுக்கு இந்த உதவி வழங்கப்படுகிறது.

இந்நிலையில் அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வரவில்லை என்றாலும், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் (PM-KISAN) யோஜனா (திட்டம்) பதிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கில் 12வது தவணைத் தொகை வரவு வைக்கப்படும் என்று ஊகங்கள் பரவி வருகின்றன. செப்டம்பர் 30, வெள்ளிக்கிழமை. பிரதமர்-கிசான் திட்டத்தின் 1வது தவணையை மே 31 அன்று விவசாயிகள் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://tvid.in/sdk/embed/embed.html#apikey=tamilweba5ec97054033e061&videoid=1xr1b759gg&height=360&width=640

உங்கள் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டதை எப்படி சரிபார்ப்பது:

1. முதலில் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmkisan.gov.in என்ற தளத்திற்குச் செல்லவும்.

2. அதன்பின் அதில் தோன்றும் ‘Farmer’s Corner Section என்பதை கிளிக் செய்யவும்

3. அதில் Beneficiary Status’ option என்பதை தேர்வு செய்யவும்

4. அதில் உங்களின் அல்லது பதிவு செய்யப்பட்ட விவசாயியின் பெயர் மற்றும் வங்கி விவரங்கள் இருக்கும்.

5. அதன்பின் உங்கள் ஆதார் கார்டு எண் மற்றும் குடும்ப அடையாள அட்டை விவரங்களை உள்ளிடவும். அதன்பின் கெட் டேட்டே என்பதைக் கிளிக் செய்யவும்.

6. அதன்பின் உங்கள் வங்கிக் கணக்கில் உங்களின் தவணைத் தொகையானது வரவு வைக்கப்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்