ஆப்நகரம்

இந்த போஸ்ட் ஆபீஸ் திட்டம் பற்றி தெரியுமா? பிரதமர் மோடியே முதலீடு செஞ்சிருக்கார்!

பிரதமர் நரேந்திர மோடியே முதலீடு செய்துள்ள இந்த போஸ்ட் ஆபீஸ் திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Samayam Tamil 24 Dec 2021, 7:29 pm
ரிஸ்க் எடுக்காமலேயே நல்ல லாபம் சம்பாதிக்க வேண்டுமென விரும்புவோருக்கு போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். இதில் தேசிய சேமிப்பு சான்றிதழ் (National savings certificate) திட்டத்தை பற்றி பார்க்கலாம். இத்திட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியே முதலீடு செய்துள்ளார்.
Samayam Tamil post office


தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்துக்கு 5 ஆண்டுகள் lock-in காலம் உண்டு. அதாவது, 5 ஆண்டுகளுக்கு நமது பணத்தை எடுக்க முடியாது. கூட்டு வட்டி மூலம் கிடைக்கும் லாபம் மெச்சூரிட்டியின்போது உங்களுக்கு கிடைத்துவிடும்.

சிறு மற்றும் நடுத்தர சேமிப்புகளுக்கு தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தை பயன்படுத்தலாம். இத்திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் அருகில் உள்ள தபால் அலுவலகத்துக்கு சென்று முதலீடு செய்யலாம். தனியாகவும், கூட்டாகவும் (Joint account) இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

LIC Policy: இந்த சூப்பர் பாலிசியில் 1 கோடி ரூபாய் கிடைக்கும்!
தற்போது தேசிய சேமிப்பு சான்றிதழுக்கு 6.8% வட்டி வழங்கப்படுகிறது. ஆக இத்திட்டத்தில் இப்போது 1000 ரூபாய் முதலீடு செய்தால் ஐந்து ஆண்டுகளில் 1389.49 ரூபாயாக மாறும். இப்போது 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் 1.38 லட்சம் ரூபாயாக மாறும்.

அதிகபட்ச முதலீட்டுக்கு எந்தவொரு வரம்பும் இல்லை. 5 லட்சம் ரூபாய்க்கு தேசிய சேமிப்பு சான்றிதழ் வாங்கினால் 5 ஆண்டுகளில் 6.94 லட்சம் ரூபாயாக மாறும். ஆண்டு வாரியாக கூட்டு வட்டி கனக்கிடப்பட்டு மெச்சூரிட்டியின்போது முதலீட்டாளரிடம் செலுத்தப்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்