ஆப்நகரம்

இனி ஏடிஎம்மில் பணம் எடுக்க தடை.. வாடிக்கையாளர்கள் ஷாக்!!

வாடிக்கையாளர்கள் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்க நாட்டின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி தடை விதித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Samayam Tamil 3 Feb 2021, 9:56 am
மோசடிகளை தடுக்கும் நோக்கில், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்கள் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்க சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
Samayam Tamil ATM


பிப்ரவரி 1 முதல் பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் Non-EMV ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்க அனுமதிக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பணம் எடுப்பது மட்டுமல்லாமல் பேலன்ஸ் பார்ப்பது போன்ற சேவைகளையும் பெற முடியாது.

எல்லாருக்கும் சம்பளம் உயர்வு.. பென்சன் வாங்குவோருக்கும் சூப்பர் நியூஸ்!!
வாடிக்கையாளர்களை மோசடிகளில் இருந்து பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது. எனினும், வாடிக்கையாளர்கள் அனைவரும் EMV ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுத்துக்கொள்ளலாம்.

Non-EMV ஏடிஎம் என்றால் என்ன?

ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது, இயந்திரத்திலேயே ஏடிஎம் கார்டை வைத்திருக்க தேவையிருக்காது. எளிமையாக சொன்னால், கார்டை இயந்திரத்துக்குள் நுழைத்து வெளியே எடுத்துவிட்டால் போதும். இந்த வகை ஏடிஎம்கள் Non-EMV ஏடிம்கள் ஆகும்.

200 ரூபாயை ஒரு கோடியாக மாற்றும் ரகசியம்.. மாதம் ரூ.34,000 பென்சனும் வரும்!
EMV ஏடிஎம் என்றால் என்ன?

ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது, இயந்திரத்திலேயே ஏடிஎம் கார்டை வைத்திருக்க வேண்டும். அதாவது, காரை நுழைத்து பணத்தை எடுத்த பிறகே கார்டையும் எடுக்க முடியும். இவை EMV ஏடிஎம்கள் ஆகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்