ஆப்நகரம்

பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஒரு கிளையில் மட்டும் ரூ. 11,500 கோடிக்கு மோசடி பண பரிவர்த்தனை!!

மும்பையில் உள்ள தங்களது ஒரு கிளையில் மட்டும் மோசடி மற்றும் முறையற்ற கணக்கு என்ற வகையில் ரூ. 11,500 கோடிக்கு பண பரிவர்த்தனை நடந்து இருப்பதாக பஞ்சாப் நேஷனல் வங்கி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 14 Feb 2018, 3:56 pm
மும்பையில் உள்ள தங்களது ஒரு கிளையில் மட்டும் மோசடி மற்றும் முறையற்ற கணக்கு என்ற வகையில் ரூ. 11,500 கோடிக்கு பண பரிவர்த்தனை நடந்து இருப்பதாக பஞ்சாப் நேஷனல் வங்கி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil pnb detects 1 8 billion worth of fraudulent transactions in mumbai branch
பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஒரு கிளையில் மட்டும் ரூ. 11,500 கோடிக்கு மோசடி பண பரிவர்த்தனை!!


நாட்டிலேயே இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கி. சொத்து மதிப்பு அடிப்படையில் நான்காவது பெரிய வங்கி. இந்த வங்கியின் மும்பை கிளை ஒன்றில் மட்டும் ரூ. 11,500 கோடி மதிப்பிலான சட்ட விரோத பண பரிவர்த்தனை நடந்திருப்பதை அந்த வங்கி கண்டறிந்துள்ளது. யார் இந்த பரிவர்த்தனையை மேற்கொண்டனர் என்ற விவரத்தை வங்கி வெளியிடவில்லை. ஆனால், அதுகுறித்த தகவல்களை சட்ட அமலாக்கத்துறைக்கு அனுப்பி வைத்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

எந்தளவிற்கு மோசடி கணக்குகள் வங்கியை பாதிக்கும் என்ற விவரத்தை வங்கி வெளியிடவில்லை. இந்த வங்கிக் கணக்குகள் குறித்து சரியான தகவல்கள் இருக்கும்பட்சத்தில், அதுகுறித்து வங்கி பரிசீலிக்கும் என்று வங்கி தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்