பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி தொடர்பாக ஐசிஐசிஐ வங்கித் தலைவர் சந்தா கோச்சார் மற்றும் ஆக்சிஸ் வங்கியின் சிக்கா சர்மா இருவரையும் ஊழல் தடுப்பு மையம் விசாரிக்க முடிவு செய்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து சர்வதேச வைர வர்த்தகர்களான நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹ்ல் சோக்ஷி இருவரும் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் ரூ. 12,600 கோடி அளவிற்கு மோசடி செய்து இருப்பதாக அவர்கள் இருவர் மீதும் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த நிலையில், இவர்களுக்கு கடன் கொடுப்பதற்காக உத்தரவாதக் கடிதங்களை பஞ்சாப் நேஷனல் வங்கி கொடுத்து இருந்தது. அதன் பேரில் அரசு பொதுத்துறை வங்கிகள் கடன் கொடுத்து இருந்தன. ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கியும் நிரவ் மோடி மற்றும் சோக்ஷிக்கு கடன் அளித்து இருந்தன. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள ஐசிஐசிஐ வங்கித் தலைவர் சந்தா கோச்சார் மற்றும் ஆக்சிஸ் வங்கித் தலைவர் சிக்கா சர்மா இருவருக்கும் ஊழல் தடுப்பு அமைப்பு சம்மன் அனுப்பி இருந்தது. இன்று அவர்கள் இருவரிடமும் மும்பையில் விசாரணை நடைபெற இருக்கிறது.
கடந்தாண்டு சோக்ஷியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்துக்கு ஐசிஐசிஐ ரூ. 1,000 கோடி கடன் கொடுத்துள்ளது. ஆக்சிஸ் வங்கி ரூ. 700 கோடி கடன் கொடுத்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் அதிகாரிகளும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகவுள்ளது.
அரசு பொதுத்துறை வங்கிகளில் மட்டும் நிரவ் மோடியும், சோக்ஷியும் ரூ. 12,000 கோடி மோசடி செய்து இருப்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற பின்னரே இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து சர்வதேச வைர வர்த்தகர்களான நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹ்ல் சோக்ஷி இருவரும் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் ரூ. 12,600 கோடி அளவிற்கு மோசடி செய்து இருப்பதாக அவர்கள் இருவர் மீதும் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த நிலையில், இவர்களுக்கு கடன் கொடுப்பதற்காக உத்தரவாதக் கடிதங்களை பஞ்சாப் நேஷனல் வங்கி கொடுத்து இருந்தது. அதன் பேரில் அரசு பொதுத்துறை வங்கிகள் கடன் கொடுத்து இருந்தன. ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கியும் நிரவ் மோடி மற்றும் சோக்ஷிக்கு கடன் அளித்து இருந்தன. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள ஐசிஐசிஐ வங்கித் தலைவர் சந்தா கோச்சார் மற்றும் ஆக்சிஸ் வங்கித் தலைவர் சிக்கா சர்மா இருவருக்கும் ஊழல் தடுப்பு அமைப்பு சம்மன் அனுப்பி இருந்தது. இன்று அவர்கள் இருவரிடமும் மும்பையில் விசாரணை நடைபெற இருக்கிறது.
கடந்தாண்டு சோக்ஷியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்துக்கு ஐசிஐசிஐ ரூ. 1,000 கோடி கடன் கொடுத்துள்ளது. ஆக்சிஸ் வங்கி ரூ. 700 கோடி கடன் கொடுத்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் அதிகாரிகளும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகவுள்ளது.
அரசு பொதுத்துறை வங்கிகளில் மட்டும் நிரவ் மோடியும், சோக்ஷியும் ரூ. 12,000 கோடி மோசடி செய்து இருப்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற பின்னரே இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.