ஆப்நகரம்

நீரவ் மோடி வழக்கில் முதல் வெற்றி... ரூ.24 கோடி மீட்பு!

நீரவ் மோடி வழக்கில் முதல் வெற்றியாக, கார்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகம் அமெரிக்காவிலிருந்து ரூ.24 கோடியை மீட்டுள்ளது.

Samayam Tamil 25 Aug 2020, 9:43 pm
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி அவரது உறவினர் மெஹுல் சோக்சியுடன் இணைந்து, போலியான ஆவணங்களைக் கொண்டு ரூ.13,700 கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டே தப்பியோடினார். சிறிது காலம் தலைமறைவாக இருந்த அவர் பின்னர் லண்டனில் வைத்து கைதுசெய்யப்பட்டார். தற்போது லண்டனில் சிறையில் இருக்கும் நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் அவருக்குச் சொந்தமான சொத்துகளை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
Samayam Tamil nirav


இந்நிலையில், நீரவ் மோடிக்கு எதிராக நடைபெற்றுவரும் வழக்கில் புதிய திருப்பமாக, பகுதி கடன் தொகை மீட்கப்பட்டுள்ளது வெளிநாட்டுக் கட்டுப்பாட்டுக்குள் வரும் நீதிமன்றத்தில் நடைபெறும் பெருநிறுவன நிர்வாக வழக்கைத் தலைமை தாங்கி நடத்திய மத்திய கார்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் பணத்தை மீட்பதில் முதல் தவணையாக 3.25 மில்லியன் டாலரை மீட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது ரூ.24.33 கோடியாகும். நீரவ் மோடியின் சொத்துகள் பணமாக்கப்பட்டு 11.04 மில்லியன் டாலர் அளவிற்கு பஞ்சாப் நேஷனல் வங்கி உட்பட பிணையில்லாக் கடன் கொடுத்தவர்களுக்கு விநியோகம் செய்யப்படுவதற்காக தயாராக உள்ளது. இதர செலவினங்கள் கடன் கொடுத்த மற்ற வங்கிகளின் கோரிக்கைகளை பொறுத்து அடுத்தகட்ட மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் வங்கி மோசடிகள்... எத்தனை கோடி தெரியுமா?

தற்போது நீரவ் மோடி வழக்கில் 3.25 மில்லியன் டாலர் பணம் மீட்கப்பட்டுள்ளது இந்திய அரசின் கார்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் வெளிநாட்டு எல்லைகளில் கார்பரேட் மோசடிக்கு எதிராக மேற்கொள்ளும் போராட்டத்திற்கு ஒரு சாதனையாகும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. நீரவ் மோடி, மெஹுல் சோக்சி ஆகியோர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நிறுவனங்களிடமிருந்து நீதிமன்ற உத்தரவுப்படி பணத்தைத் திரும்ப பெறுவதற்கான முயற்சிகளையும் கார்பரேட் அமைச்சகம் தொடங்கியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்