ஆப்நகரம்

ATMல் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள்!

ஏடிஎம் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது பஞ்சாப் நேஷனல் வங்கி.

Samayam Tamil 29 Nov 2020, 4:33 pm

பஞ்சாப் நேஷனல் வங்கி இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாகும். டிசம்பர் 1ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகளை பஞ்சாப் நேஷனல் வங்கி மாற்றியுள்ளது.
Samayam Tamil PNB 2.0 ATM


ஏடிஎம் மோசடிகளை தவிர்ப்பதற்காக இப்புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, PNB 2.0 ஏடிஎம்களில் வாடிக்கையாளர்கள் 10000 ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால் OTP பாஸ்வோர்ட் வழங்க வேண்டும்.

வங்கியிடம் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு OTP பாஸ்வோர்ட் அனுப்பப்படும். அதை பதிவு செய்தால் மட்டுமே பணம் எடுக்க முடியும். எனினும், நள்ளிரவு 1 மணி முதல் காலை 8 மணி வரை பணம் எடுப்போருக்கு மட்டுமே இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும்.

டிசம்பர் முதல் இதெல்லாம் மாறப்போகுது!

எனவே, ஏடிஎம் இயந்திரத்துக்கு பணம் எடுக்க செல்லும்போது கையில் மொபைலை எடுத்துச்செல்ல வேண்டியது மிக அவசியம். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் ஆகிய இரு வங்கிகளும் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து, மூன்று வங்கிகளும் ஒருங்கிணைந்தபின் PNB 2.0 என அழைக்கப்படுகிறது. எனவே, PNB 2.0 ஏடிஎம்களில் பணம் எடுப்போருக்கு மட்டுமே இந்த விதிமுறைகள் பொருந்தும். மற்ற ஏடிஎம்களில் பணம் எடுப்போருக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை.

போலி ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி சட்டவிரோதமாக பணம் எடுத்து மோசடிகளில் ஈடுபடுவோரை தடுப்பதற்காக இப்புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்