வைர வியாபாரி நிரவ் மோடி ரூ.13,000 கோடிக்கு மேல் வங்கிக்கடன் மோசடி செய்திருப்பதை கண்டுபிடிக்க உதவிய ஆவணங்களை வெளியிட பஞ்சாப் நேஷனல் வங்கி மறுத்துவிட்டது.
தகவல் பெறும் உரிமைச் சட்டம் (RTI) மக்களாட்சித் தத்துவத்தில் வெளிப்படையான நிர்வாகம், அரசில் நடக்கும் செயல்கள் மக்களுக்குத் தெரிய வேண்டும் என்ற நோக்கில் 2005-ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்டது.
இது, அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்கள் குறித்த தகவலை யார் வேண்டுமானாலும் பெறுவதற்கு 2005 வழிவகை செய்கிறது. இச்சட்டத்தின் கீழ் வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் வங்கிக்கடன் மோசடி செய்ததைக் கண்டுபிடிக்க உதவிய ஆவணங்களின் நகல்களைக் கேட்டு சமூக ஆர்வலர் ஒருவர் அந்த வங்கிக்கு மனு செய்திருக்கிறார்.
அவர் கோரிய தகவலை மறுத்துள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி நிர்வாகம், “தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன் பிரிவு 8 (1) ன் படி விசாரணையில் இருக்கும் வழக்கு தொடர்பான ஆவணங்களை வழக்கு முடிவதற்கு முன் வழங்குவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஆவணங்களை வெளியிட்டால் வழக்கில் குற்றம்சாட்டப்படுபவர்கள் கைது செய்யப்படுவதைத் தாமதப்படுத்தவோ முட்டுக்கட்டைபோடாவோ கூடும் என்றும் விளக்கம் அளித்துள்ளது.
தகவல் பெறும் உரிமைச் சட்டம் (RTI) மக்களாட்சித் தத்துவத்தில் வெளிப்படையான நிர்வாகம், அரசில் நடக்கும் செயல்கள் மக்களுக்குத் தெரிய வேண்டும் என்ற நோக்கில் 2005-ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்டது.
இது, அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்கள் குறித்த தகவலை யார் வேண்டுமானாலும் பெறுவதற்கு 2005 வழிவகை செய்கிறது. இச்சட்டத்தின் கீழ் வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் வங்கிக்கடன் மோசடி செய்ததைக் கண்டுபிடிக்க உதவிய ஆவணங்களின் நகல்களைக் கேட்டு சமூக ஆர்வலர் ஒருவர் அந்த வங்கிக்கு மனு செய்திருக்கிறார்.
அவர் கோரிய தகவலை மறுத்துள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி நிர்வாகம், “தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன் பிரிவு 8 (1) ன் படி விசாரணையில் இருக்கும் வழக்கு தொடர்பான ஆவணங்களை வழக்கு முடிவதற்கு முன் வழங்குவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஆவணங்களை வெளியிட்டால் வழக்கில் குற்றம்சாட்டப்படுபவர்கள் கைது செய்யப்படுவதைத் தாமதப்படுத்தவோ முட்டுக்கட்டைபோடாவோ கூடும் என்றும் விளக்கம் அளித்துள்ளது.