ஆப்நகரம்

மூத்த குடிமக்களுக்கான சிறந்த பென்சன் திட்டம்!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்தில் எப்படி இணைந்து பயன்பெறுவது என்று இங்கே பார்க்கலாம்.

Samayam Tamil 23 Feb 2021, 4:43 pm
நிறைய வங்கிகளும் தபால் நிலையங்களும் மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன. இவற்றில் மிக முக்கியமான ஒன்று பஞ்சாப் நேஷனல் வங்கியில் செயல்படுத்தப்படும் மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம். மத்திய அரசால் 2004ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் நல்ல ரிட்டன் கிடைக்கிறது. இந்தியக் குடிமக்கள் யாராக இருந்தாலும் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். 60 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். விருப்பு ஓய்வு பெற்றவர்கள் 55 வயதிலும், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் 50 வயதிலும் இத்திட்டத்தில் சேமிக்கத் தொடங்கலாம். இதற்கு சில நிபந்தனைகள் உள்ளன.
Samayam Tamil pension


இத்திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்ச சேமிப்புத் தொகை ரூ.15 லட்சம். மத்திய அரசு நிர்ணயிக்கும் வட்டியில் இத்திட்டத்துக்கான லாபம் கிடைக்கிறது. இதற்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு மாற்றியமைக்கிறது. இத்திட்டத்துக்கான சேமிப்புக் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தேவைப்பட்டால் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்துக்கொள்ளலாம். இத்திட்டத்தில் தனிநபர் கணக்காகவோ அல்லது கணவன் - மனைவி கூட்டுக் கணக்காகவோ திறந்து முதலீடு செய்யலாம்.

பிறந்த குழந்தைக்கு ஆதார் எடுப்பது எப்படி? இதெல்லாம் அவசியம்!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்தின் கீழ் கணக்கு திறக்கலாம். இதற்குத் தேவையான ஆவணங்களைப் பூர்த்தி செய்து அடையாள ஆவணங்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ போன்றவற்றை வழங்க வேண்டும். இதற்கு ஆதார் அட்டையும் அவசியம். தேவைப்பட்டால் முதிர்வுக் காலத்துக்கு முன்னரே சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பணத்தை எடுக்கும் வசதி இத்திட்டத்தில் உள்ளது. இத்திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் எந்தவொரு வங்கிக் கிளையிலும் இந்தக் கணக்கை நீங்கள் திறக்க முடியும். அரசின் திட்டம் என்பதால் இந்த முதலீட்டில் ஆபத்து எதுவும் இல்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்