ஆப்நகரம்

கொரோனா நிவாரணம்: ரூ.59 கோடி வழங்கிய துறைமுகங்கள்!

மத்திய கப்பல் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்கள், துறைமுகங்கள் மற்றும் ஊழியர்கள் சார்பாக கொரோனா நிவாரண நிதியாக ரூ.59 கோடி வழங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 6 Apr 2020, 5:20 pm
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாடு முழுவதும் பல்வேறு தொழில் துறை நிறுவனங்களும் அரசு அமைப்புகளும் தங்களால் முடிந்த நிதியுதவியை வழங்கி வருகின்றன. அந்த வகையில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தரும் வகையில் கப்பல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் துறைமுகங்களின் ஊழியர்கள் ஒன்றிணைந்து ரூ.7 கோடி நன்கொடை வழங்கியுள்ளனர். பிஎம் கேர்ஸ் எனப்படும் பிரதமரின் பேரிடர் நிவாரண நிதியில் இத்தொகை செலுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil கொரோனா நிவாரணம்_ ரூ59 கோடி வழங்கிய துறைமுகங்கள்


சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தில் பணியாற்றும் 3,891 ஊழியர்கள் இணைந்து ரூ.72,13,000 வழங்கியுள்ளனர். இதுதவிர, வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தில் பணியாற்றும் 691 பணியாளர்கள் இணைந்து ரூ.15,00,000, காமராஜர் துறைமுகத்தில் பணியாற்றும் 102 ஊழியர்கள் இணைந்து ரூ.3,71,624 நன்கொடையாக வழங்கியுள்ளனர். கப்பல் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 12 துறைமுகங்கள் மற்றும் ஆறு பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் 29,027 ஊழியர்கள் சேர்ந்து தங்களின் ஒரு நாள் ஊதியத்தை நன்கொடையாக அளித்துள்ளனர்.

கொரோனா பீதி: வருவாய் இழப்பில் தொழில் நிறுவனங்கள்!

ஊழியர்கள் சார்பாக ரூ.7 கோடி வழங்கப்பட்டுள்ள நிலையில், துறைமுகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் சார்பாக ரூ.52 கோடி வழங்கப்பட்டுள்ளது. மத்திய கப்பல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் துறைமுகங்களும், பொதுத் துறை நிறுவனங்களும், சிஎஸ்ஆர் எனப்படும் சமூகப் பொறுப்பு நிதித் திட்டத்தின் கீழ் ரூ.52 கோடியை வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகம் ரூ.50 லட்சமும், வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகம் ரூ.2 கோடியும், காமராஜர் துறைமுகம் ரூ.4 கோடியும் அளிப்பதாக கப்பல் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்