ஆப்நகரம்

வறுமையில் வாடும் இந்தியா.. ஆறுதல் தந்த உலக வங்கி!

கடுமையான வறுமையில் இருந்து இந்தியா சற்று மேம்பட்டுள்ளதாக உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது.

Samayam Tamil 18 Apr 2022, 3:25 pm
மக்கள் தொகை அடிப்படையில் உலகின் மிகப் பெரிய நாடுகளில் சீனாவைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் இருக்கிறது. ஆனால் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப இங்கு வேலைவாய்ப்புகளோ வாழ்வாதாரமோ இல்லை. இதனால் ஏழை மக்கள் இந்தியாவில் அதிகமாகவே இருக்கின்றன. பணக்காரன் இன்னும் பணக்காரன் ஆகிறான்; ஏழை இன்னும் ஏழை ஆகிறான் என்று கூற்றுக்கு ஏற்ப வறுமையில் இருப்பவர்கள் இன்னும் அதிகமான வறுமையையே சந்திக்கின்றனர்.
Samayam Tamil poverty


வறுமை ஒழிப்பை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் உலக வங்கி இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு தொடர்ந்து உதவி வருகிறது. வறுமை தொடர்பான ஆய்வறிக்கையையும் உலக வங்கி அவ்வப்போது வெளியிடுகிறது. அந்த வகையில் தற்போது உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவுக்கு சற்று ஆறுதல் கிடைத்துள்ளது.

அதாவது, 2011-19 ஆண்டுகளில் இந்தியாவில் அதிகபட்ச வறுமை விகிதம் 12.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. குறிப்பாக, கிராமப்புற மக்களுக்கான வறுமையில்தான் இந்த முறை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது, நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் வறுமை விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. 2016ஆம் ஆண்டில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது நகரப்புறங்களில் வறுமை விகிதம் 2 சதவீதம் உயர்ந்தது.

ஊரடங்கால் பெரும் நெருக்கடி.. வலையில் சிக்கிய 47 லட்சம் பேர்!
அதேநேரம், 2019ஆம் ஆண்டில் கிராமப்புறங்களில் வறுமை விகிதம் 10 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்தது. ஒட்டுமொத்த இந்தியாவில், 2011ஆம் ஆண்டில் 22.5 சதவீதமாக இருந்த வறுமை விகிதம் 2019ஆம் ஆண்டில் 10.2 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. 2011-19 காலத்தில் கிராமப்புறங்களில் 14.7 சதவீதமும், நகர்ப்புறங்களில் 7.9 சதவீதமும் வறுமை விகிதம் குறைந்துள்ளதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்