தில்லி: பப்ளிக் பிராவிடன்ட் நிதி (பிபிஎப்) மீது வரி கிடையாது. ஆனால், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து பெறப்படும் 60 சதவீத தொகைக்கு வரி விதிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று பொது பெட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பி.எப்., (பி.எப்) பில் இருந்து எடுக்கப்படும் நிதியில் 60 சதவீத தொகைக்கு வரி விதிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து, பிபிஎப் மீதான நிதிக்கு வரி விதிக்கப்படுமா? விதிக்கப்படாதா? என்ற கேள்வி பரவலாக எழுந்தது. இந்நிலையில், பிஎப்-பில் இருந்து எடுக்கப்படும் 60 சதவீத தொகைக்கு மட்டும் வரி விதிக்கப்படும் என்றும், பிபிஎப் தொகைக்கு வரி விதிக்கப்படாது என்றும் மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இதற்கு தில்லியில் இன்று விளக்கம் அளித்த வருமான வரித்துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா, ''60 பிஎப் தொகைக்கு மட்டுமே வரி விதிக்கப்படும். இந்த வகையில் அதிக வருவாய் பெறுபவர்களில் 5ல் ஒருவரைத்தான் இது பாதிக்கும். இந்த நடவடிக்கை வருமானத்தை அதிகரிப்பதற்கு அல்ல.
பிபிஎப்-பில் ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரை செலுத்துபவர்களுக்கு வரி கிடையாது'' என்று தெரிவித்தார்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து எடுக்கப்படும் 60 சதவீத தொகைக்கு வரி விதிக்கப்படும் என்று பட்ஜெட்டில் கூறியிருப்பதற்கு நடுத்தர மக்கள் தங்களது ஆட்சேபத்தை தெரிவித்துள்ளனர்.
பிபிஎப் என்பது யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 500 முதல் அதிகபட்சம் ரூ. 1,50,000 வரை நிதி செலுத்தலாம். இதற்கு அதிக வட்டி அளிக்கப்படுகிறது. ஆனால், வரி இல்லை.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று பொது பெட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பி.எப்., (பி.எப்) பில் இருந்து எடுக்கப்படும் நிதியில் 60 சதவீத தொகைக்கு வரி விதிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து, பிபிஎப் மீதான நிதிக்கு வரி விதிக்கப்படுமா? விதிக்கப்படாதா? என்ற கேள்வி பரவலாக எழுந்தது. இந்நிலையில், பிஎப்-பில் இருந்து எடுக்கப்படும் 60 சதவீத தொகைக்கு மட்டும் வரி விதிக்கப்படும் என்றும், பிபிஎப் தொகைக்கு வரி விதிக்கப்படாது என்றும் மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இதற்கு தில்லியில் இன்று விளக்கம் அளித்த வருமான வரித்துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா, ''60 பிஎப் தொகைக்கு மட்டுமே வரி விதிக்கப்படும். இந்த வகையில் அதிக வருவாய் பெறுபவர்களில் 5ல் ஒருவரைத்தான் இது பாதிக்கும். இந்த நடவடிக்கை வருமானத்தை அதிகரிப்பதற்கு அல்ல.
பிபிஎப்-பில் ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரை செலுத்துபவர்களுக்கு வரி கிடையாது'' என்று தெரிவித்தார்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து எடுக்கப்படும் 60 சதவீத தொகைக்கு வரி விதிக்கப்படும் என்று பட்ஜெட்டில் கூறியிருப்பதற்கு நடுத்தர மக்கள் தங்களது ஆட்சேபத்தை தெரிவித்துள்ளனர்.
பிபிஎப் என்பது யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 500 முதல் அதிகபட்சம் ரூ. 1,50,000 வரை நிதி செலுத்தலாம். இதற்கு அதிக வட்டி அளிக்கப்படுகிறது. ஆனால், வரி இல்லை.