ஆப்நகரம்

பிரதமர் வீட்டு வசதி திட்டம்.. உங்களுக்கு வீடு கிடைக்குமா? செக் பண்ணுங்க!

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் உங்களுக்கு வீடு கிடைக்குமா என எப்படி தெரிந்துகொள்வது?

Samayam Tamil 22 Jun 2022, 12:55 pm
நகர்ப்புறங்களில் எளிய மக்களுக்கு மலிவு விலையில் வீடு வழங்குவதற்காக 2015ஆம் ஆண்டு பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டம் (PM Awas Yojana) தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் 1.12 கோடி வீடுகளை தகுதியுள்ள பயனாளிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.
Samayam Tamil pm awas yojana


இத்திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவெனில், குடும்பத் தலைவியே வீட்டு உரிமையாளர். அதாவது, பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வீடுகளுக்கு அந்தந்த குடும்பத்தின் தலைவியே உரிமையாளர்.

பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 122.69 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 101.01 லட்சம் வீடுகளுக்கு பணி தொடங்கியுள்ளது. 61.01 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்துக்கு 2.03 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் 119736 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது.

ESIC: எல்லா மாவட்டங்களிலும் சேவை.. தமிழகத்துக்கு 2 மருத்துவமனைகள்!
பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு பெறுவதற்கு நீங்களும் விண்ணப்பிக்கலாம். அப்படி ஏற்கெனவே விண்ணப்பித்திருந்தால் உங்களுக்கு வீடு கிடைக்குமா, நீங்கள் தகுதியுள்ளவரா என்பதை எப்படி தெரிந்துகொள்வது?


  • 'Search Beneficiary' பகுதியை கிளிக் செய்யவும்.

  • உங்கள் ஆதார் எண்ணை பதிவிட்டு தேடவும்.

  • இதன்படி நீங்கள் தகுதியுள்ள பயனாளியா, உங்களுக்கு வீடு கிடைக்குமா என்பதை தெரிந்துகொள்ளலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்