ஆப்நகரம்

Insurance: 12 ரூபாய் போதும் - ரூ.2 லட்சம் கிடைக்கும்!

ரூ.12 பிரீமியத் தொகையில் ரூ.2 லட்சம் காப்பீடு பெறுவது எப்படி என பார்க்கலாம்.

Samayam Tamil 21 Sep 2020, 3:59 pm
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்திற்கு விபத்து காப்பீடு கணக்கு தொடங்கியவர்களுக்கு இலவச ரூபே டெபிட் கார்டு வழங்கப்படுகிறது. 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இக்கணக்குகளுக்கான காப்பீட்டுத் தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
Samayam Tamil pradhan mantri jan dhan yojana application process and benefits
Insurance: 12 ரூபாய் போதும் - ரூ.2 லட்சம் கிடைக்கும்!


நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் இத்தகவலை நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா

பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் 18 முதல் 70 வயதுக்குட்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு வெறும் 12 ரூபாய் பிரீமியத் தொகை செலுத்தினால் போதும்.

​பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி யோஜனா

இத்திட்டத்தின் கீழ் 18 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீடு வழங்கப்படுகிறது. இதற்கு ஆண்டு பிரீமியத் தொகை வெறும் ரூ.330 மட்டுமே.

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா

அனைத்து மக்களும் நிதிச் சேவைகளை பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட திட்டமே பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா. இத்திட்டத்தின் கீழ் சேமிப்பு கணக்கு மற்றும் டெபாசிட் கணக்கு, ரெமிட்டன்ஸ், கடன், காப்பீடு, பென்சன் என அனைத்தையும் சாமானியர்களும் பயன்படுத்தும் வகையில் சேவை வழங்கப்படுகிறது.

​பயன்கள்

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் அனைவரும் வங்கிச் சேவை பெறலாம். இந்த கணக்குகளுக்கு மினிமம் பேலன்ஸ் தேவையில்லை. இக்கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வட்டி வருமானம் கிடைக்கும். இத்துடன் ரூபே டெபிட் கார்டும் கிடைக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்