ஆப்நகரம்

ஈசியா மாதம் ரூ.3,000க்கு மேல் பெறலாம்!

பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனாவின் பயன்கள், தகுதி, விண்ணப்ப முறை பற்றி பார்க்கலாம்.

Samayam Tamil 15 Aug 2020, 7:12 pm

அமைப்புசாரா தொழிலாளர்களும் மாதம் பென்சன் பெறும் வகையில் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வீட்டு வேலை செய்யும் பெண்கள், வாகன ஓட்டுநர்கள், பிளம்பர்கள், ரிக்‌ஷா தொழிலாளர்கள், கைத்தறி நெசவாளர்கள் உள்ளிட்ட பல அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதாந்தர பென்சன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil பென்சன்


இத்திட்டத்தின் கீழ் விவசாயத் தொழிலாளர்களுக்கும் பென்சன் வழங்கப்படும். இதுமட்டுமல்லாமல், இத்திட்டத்தின் கீழ், 60 ஆண்டு வயதை கடந்த நபர்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தது ரூ.3000 பென்சன் தொகை வழங்கப்படும். பயனாளிகள் பென்சன் பெறும் காலத்திலேயே இறந்துவிட்டால், அவரின் மனைவி/கணவனுக்கு பென்சன் வழங்கப்படும்.

இதை ஒழுங்கா செஞ்சிடுங்க... மிஸ் பண்ணா பிரச்சினைதான்!

இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் தனது வயதுக்கு ஏற்ப மாறுபட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும். பயனாளியின் வயது 18 என்றால் மாதம் ரூ.55 மட்டும் செலுத்தினால் போதும். பயனாளியின் வயது 30க்கு மேல் இருந்தால் மாதம் ரூ.100 செலுத்த வேண்டும்.

பயனாளி 40 வயதைக் கடந்தவராக இருந்தால் மாதம் ரூ.200 செலுத்த வேண்டும். இத்திட்டத்தின் கீழ் இணைய வங்கி சேமிப்புக் கணக்கு அல்லது ஜன் தன் கணக்கு தேவைப்படும். மேலும், ஆதார் அட்டை, மொபைல் எண் ஆகிய விவரங்களை வழங்க வேண்டும்.

திட்டத்தில் இணையும்போதே நாமினிக்களின் பெயரையும் பதிவு செய்யலாம். திட்டத்தில் பதிவு செய்தபிறகு லேபர் யோகி கார்டு வழங்கப்படும். இதற்காக மத்திய தொழிலாளர் துறை சார்பில் பதிவு முகாம்களும் நடத்தப்படுகின்றன. பொது சேவை மையங்கள் வாயிலாகவே இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்