ஆப்நகரம்

சீனியர் சிட்டிசன்களுக்கு பென்சன்.. மத்திய அரசின் பலே திட்டம்!

சீனியர் சிட்டிசன்களுக்கு பென்சன் வழங்கும் மத்திய அரசின் அருமையான திட்டம்.

Samayam Tamil 4 May 2022, 12:23 pm
சீனியர் சிட்டிசன்கள் பென்சன் பெறுவதற்காக பிரதமர் வய வந்தனா யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சீனியர் சிட்டிசன்களுக்காகவே அறிமுகப்படுத்தப்பட்ட பென்சன் திட்டங்களில் வய வந்தனா யோஜனா நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டத்தில் முதலீடு செய்து எப்படி பென்சன் பலன்களை பெறுவது என்பதை பார்க்கலாம்.
Samayam Tamil pradhan mantri vaya vandhana yojana offers pension benefits for senior citizen check rate and features
சீனியர் சிட்டிசன்களுக்கு பென்சன்.. மத்திய அரசின் பலே திட்டம்!


​பிரதமர் வய வந்தனா யோஜனா

2020ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி பிரதமர் வய வந்தனா யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது (Pradhan Mantri Vaya Vandana Yojana). இத்திட்டம் 2023 மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு. இத்திட்டத்தின் கீழ் சீனியர் சிட்டிசன்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட விகிதத்தில் பென்சன் கிடைக்கும்.

​பென்சன் விகிதம்

சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கப்படும் பென்சன் விகிதம் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தில் மத்திய நிதியமைச்சகத்தால் முடிவு செய்யப்படும். தற்போது 2022-23ஆம் நிதியாண்டுக்கு பென்சன் விகிதம் 7.40% என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

​எல்ஐசி

பிரதமர் வய வந்தனா யோஜனா திட்டத்தை நிர்வகிப்பதற்கான முழு அதிகாரமும் எல்ஐசி (LIC) நிறுவனத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

​முதலீடு

இந்த பாலிசியை வாங்க விரும்புவோர் ஆன்லைனில் https://licindia.in/ இணையதளம் வாயிலாக முதலீடு செய்யலாம். அல்லது நேரடியாக எல்ஐசி அலுவலகத்துக்கு சென்று பாலிசியை வாங்கலாம்.

​முக்கிய விவரங்கள்

இத்திட்டத்துக்கு வரி சலுகைகள் ஏதும் இல்லை. 60 வயதை தாண்டியவர்கள் அனைவரும் இதில் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். 2023 மார்ச் மாத இறுதிக்குள் பாலிசியை வாங்கிட வேண்டும்.

​எவ்வளவு பென்சன்?

இத்திட்டத்தில் மாதம் குறைந்தபட்சம் 1000 ரூபாய் பென்சன் கிடைக்கும். அதிகபட்சமாக 9,250 ரூபாய் பென்சன் கிடைக்கும்.

​கடன்

பாலிசி வாங்கி 3 ஆண்டுகள் நிறைவடைந்தபின் கடன் பெற்றுக்கொள்ளலாம். பாலிசி விலையில் 75% வரை கடனாக வாங்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்