ஆப்நகரம்

ரகுராம் ராஜனுக்கு பிரணாப் முகர்ஜி பாராட்டு!

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் அளவை குறைப்பதில் முக்கிய பங்காற்றினார் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பாராட்டு தெரிவித்துள்ளார்.

TNN 11 Sep 2016, 9:29 am
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் அளவை குறைப்பதில் முக்கிய பங்காற்றினார் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பாராட்டு தெரிவித்துள்ளார்.
Samayam Tamil pranab mukherjee praises raghuram rajans efforts to tackle npas
ரகுராம் ராஜனுக்கு பிரணாப் முகர்ஜி பாராட்டு!


இதுதொடர்பாக, சென்னையில் நடைபெற்ற கரூர் வைஸ்யா வங்கியின் 100வது ஆண்டுவிழா கூட்டத்தில் அவர் பேசியதாவது:

பொதுத்துறை வங்கிகளில், வாராக்கடன் என்பது மிகப்பெரும் சுமையாக அழுத்திக் கொண்டிருந்த வேளையில், ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவியேற்றார். அதைத்தொடர்ந்து, அவர் மேற்கொண்ட பல சீரிய நடவடிக்கைகளால், படிப்படியாக, பொதுத்துறை வங்கிகளின் வர்த்தகம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்ப தொடங்கியது.

வாராக்கடன் என்பதை கட்டுக்குள் கொண்டுவந்து, லாபம், வருமானத்தை அதிகரிக்கும் அளவுக்கு, பொதுத்துறை வங்கிகளில் மாற்றம் ஏற்பட்டது. ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி ஆளுநராக, மெச்சத்தகுந்த வகையில் செயல்பட்டுள்ளார். குறுகிய காலத்திலேயே பல அதிரடி மாற்றங்களையும் அவர் செய்ததன் காரணமாக, இந்தியப் பொருளாதாரம் சர்வதேச சிக்கல்களுக்கு ஆட்படாமல், தொடர்ந்து இயல்பான பாதையில் செல்கிறது. அதற்காகவே, ரகுராம் ராஜனை நாம் பாராட்ட வேண்டும்.

இவ்வாறு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்