ஆப்நகரம்

காப்பீடு செய்வோருக்கு புதிய தலைவலி.. இன்சூரன்ஸ் பிரீமியம் உயரப் போகுது!

வாகன காப்பீடு போன்றவற்றுக்கான பிரீமியம் தொகை 10 சதவீதம் வரை உயர வாய்ப்பு உள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 12 May 2023, 1:59 pm
விலைவாசி உயர்வால் தத்தளித்து வரும் சாமானிய மக்களுக்கு மேலும் ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நீங்களும் காப்பீடு செய்திருந்தால் அல்லது காப்பீடு செய்யத் திட்டமிட்டிருந்தால் இந்தச் செய்தி உங்களுக்குக் கவலையைத் தரலாம். ஏனெனில், காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீடுகளுக்கான பிரீமியம் தொகைய 10 சதவீதம் வரை உயர்த்தவிருக்கின்றன.
Samayam Tamil insurance



இந்திய நிறுவனங்கள் மற்றும் வாகன உரிமையாளர்களுக்கான காப்பீட்டுத் தொகை விரைவில் உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் நடந்த போரின் காரணமாகவே இன்சூரன்ஸ் பிரீமியம் அதிகரிக்க காரணம் என்று கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

உக்ரைன் போர் விளைவாக, உலகம் முழுவதும் உள்ள மறுகாப்பீட்டாளர்கள் பிரீமியத்தை 40 முதல் 60 சதவீதம் வரை அதிகரித்துள்ளனர். 2023ஆம் நிதியாண்டில், பொதுக் காப்பீட்டின் மொத்த வணிகத்தில் வாகனக் காப்பீட்டுப் பிரீமியத்தின் பங்கு ரூ. 81,292 கோடி என்ற அளவில் இருந்துள்ளது. மறுகாப்பீட்டுச் செலவு அதிகரிப்பால், வரும் காலத்தில் வாகனக் காப்பீடு 10 முதல் 15 சதவீதம் வரை உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது 24 நிறுவனங்கள் பொதுக் காப்பீட்டில் இணைந்துள்ளன. இந்த நிறுவனங்கள் தொழில்துறையில் 84 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளன. எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்த விதமான பொறுப்புகள் மற்றும் பெரிய இழப்பைத் தவிர்க்க மொத்த காப்பீட்டுத் தொகையை வாங்குவது நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேற்கத்திய நாடுகளின் மத்திய வங்கிகள் கடந்த ஓராண்டில் வட்டி விகிதத்தை 4.5 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன. இது மறுகாப்பீட்டாளர்களுக்கான மூலதனச் செலவை அதிகரித்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், காப்பீட்டு நிறுவனங்களால் மறுகாப்பீட்டு விகிதங்கள் அதிகரிப்பது உறுதி என்று கூறப்படுகிறது.

பொது காப்பீட்டு நிறுவனங்களின் அதிகாரிகளின் கணிப்பின்படி, மறுகாப்பீட்டு விகிதங்கள் அதிகரிப்பதன் காரணமாக வரும் மாதங்களில் சொத்துகள், பொறுப்புகள் மற்றும் வாகன காப்பீடு ஆகியவை 10 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்