ஆப்நகரம்

எலக்ட்ரிக் வாகனங்களின் விலை குறையுமா? நிதின் கட்கரி சூசகம்!

இந்தியாவில் மின்சார வாகனங்களின் விலை விரைவில் குறைக்கப்படும் என்று நிதின் கட்கரி மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 24 Mar 2023, 1:59 pm
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் வாகன ஓட்டிகளுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். தற்போது இந்தியாவில்ம் எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால் அதன் விலை அதிகமாக இருப்பதால் மக்கள் அதை வாங்க முடியவில்லை. மத்திய அரசின் இந்த முடிவிற்குப் பிறகு, இனி குறைந்த விலையில் மின்சார வாகனங்கள் கிடைக்கும். தற்போது பெட்ரோல் கார்களை விட டீசல் மற்றும் சிஎன்ஜி கார்களின் விலை அதிகமாக இருக்கிறது.
Samayam Tamil EV price


மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், மின்சார பேருந்துகளை இயக்க அதிக நேரம் எடுக்காது எனவும், இன்னும் ஓராண்டில் அது நடக்கும் எனவும் கூறியுள்ளார். இந்நிகழ்ச்சியில் மேலும் பேசிய நிதின் கட்கரி, ”நாடு முழுவதும் மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான விரிவான திட்டத்தை அரசு வகுத்துள்ளது. அதன் பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. பெட்ரோல் கார்களை விட டீசல் கார்களின் விலை அதிகமாக உள்ளது” என்று கூறினார்.

இந்தியாவில் இனி வரவிருக்கும் காலம் மின்சார வாகனங்களின் காலம் என்றும் நிதின் கட்கரி கூறினார். மின்சார எரிபொருள் விரைவில் நடைமுறைக்கு வரும் என்றர் கட்கரி, எலெக்ட்ரிக் வாகனத்தின் ஒவ்வொரு வகையிலும், வாகன விற்பனையின் சதவீதம் 800 சதவீதம் உயர்ந்துள்ளது எனவும், நாட்டில் இதுவரை 17 லட்சம் மின்னணு வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் ஹைட்ரஜன் கார்கள் தயாரிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருவதாகவும், இந்த வாகனங்கள் எதிர்காலத்தில் சாலைகளில் இயங்கும் எனவும் குறிப்பிட்டார்.

முன்னதாக, நாக்பூரில் இருந்து புனே செல்லும் பயணிகளின் பயண நேரம் 8 மணி நேரமாகக் குறைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். தற்போது இந்த இடைவெளியை கடக்க 14 மணி நேரம் வரை ஆகிறது. சத்ரபதி சம்பாஜி நகர் அருகே புதிதாக அமைக்கப்படும் புனே-சத்ரபதி சம்பாஜிநகர் ஆக்சிஸ் கன்ட்ரோல் கிரீன் எக்ஸ்பிரஸ்வேயில் பயண நேரத்தை குறைக்க நாக்பூர்-மும்பை சம்ரித்தி மகாமார்க் இணைக்கப்படும் என்று கட்கரி கூறினார்.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்