ஆப்நகரம்

IDFC First Bank savings interest: சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி உயர்வு.. ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் அக்கவுண்ட் இருக்கா?

சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 16 Feb 2023, 4:53 pm
தனியார் வங்கியான ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் (IDFC First Bank) சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதன்படி, வட்டி விகிதம் உயர்வு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் தெரிவித்துள்ளது.
Samayam Tamil idfc first bank savings account
idfc first bank savings account


ரிசர்வ் வங்கி பிப்ரவரி 8ஆம் தேதி ரெப்போ வட்டி விகிதத்தை 6.50% ஆக உயர்த்தியுள்ளது. இதைத்தொடர்ந்து பல்வேறு வங்கிகள் சேமிப்பு கணக்கு, ஃபிக்சட் டெபாசிட், ரெகரிங் டெபாசிட் போன்ற திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன.

இந்த வரிசையில் இப்போது ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியும் சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி குறைந்தபட்சமாக 3.50% வட்டியும், அதிகபட்சமாக 6.75% வட்டியும் வழங்குகிறது.

இதில் குறிப்பாக, 10 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட தொகைக்கு 4% வட்டி வழங்கப்படும் என ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி கூறுகிறது. எனவே, பெருவாரியான வாடிக்கையாளர்களுக்கு இந்த 4% விகிதத்தில் வட்டி கிடைக்கும்.

10 லட்சம் ரூபாய்க்கு மேல், 1 கோடி ரூபாய்க்குள் அடங்கிய தொகைக்கு 6.25% வட்டி வழங்கப்படும். 1 கோடி ரூபாய்க்கு மேல், 50 கோடி ரூபாய்க்குள் அடங்கிய தொகைக்கு 6.75% வட்டி வழங்கப்படும்.

50 கோடி ரூபாய்க்கு மேல், 100 கோடி ரூபாய்க்குள் அடங்கிய தொகைக்கு 5% வட்டி வழங்கப்படும். 100 கோடி ரூபாய்க்கு மேல், 200 கோடி ரூபாய்க்குள் அடங்கிய தொகைக்கு 4.50% வட்டி வழங்கப்படும். 200 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட தொகைக்கு 3.50% வட்டி வழங்கப்படும்.

சேமிப்பு கணக்குகளுக்கு புதிய வட்டி:

<= 10 லட்சம் ரூபாய் : 4%

> 10 லட்சம் ரூபாய் <= 1 கோடி ரூபாய் : 6.25%

> 1 கோடி ரூபாய் <= 50 கோடி ரூபாய் : 6.75%

> 50 கோடி ரூபாய் <= 100 கோடி ரூபாய் : 5%

> 100 கோடி ரூபாய் <= 200 கோடி ரூபாய் : 4.50%

> 200 கோடி ரூபாய் : 3.50%

சேமிப்பு கணக்கிற்கு வட்டி எப்படி கணக்கிடப்படும்?

ரிசர்வ் வங்கி உத்தரவின்படி, தினசரி இருப்பு தொகை (Balance) அடிப்படையில் வட்டி விகிதம் கணக்கிடப்படும். மாதம் தோறும் வட்டி தொகை வாடிக்கையாளர்களுக்கு செலுத்தப்படும்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்