ஆப்நகரம்

பென்சன் வாங்குவோருக்கு ஹேப்பி நியூஸ்.. ஓகே சொன்ன மத்திய அரசு!

பென்சன் விநியோக சேவைகளை தொடங்க கோட்டக் மஹிந்த்ரா வங்கிக்கு மத்திய அரசு அனுமதி.

Samayam Tamil 5 Apr 2022, 6:21 pm
பென்சன் விநியோகம் செய்வதற்கு மத்திய அரசிடம் இருந்து கோட்டக் மஹிந்த்ரா வங்கி (Kotak Mahindra Bank) அனுமதி பெற்றுள்ளது. இதன்படி, ஓய்வுபெற்ற நபர்கள் இனி கோட்டக் மஹிந்த்ரா வங்கி வாயிலாகவும் பென்சன் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.
Samayam Tamil pension


இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள குறிப்பாணையில், “பென்சன் விநியோக செயல்களை தொடங்குவதற்கு கோட்டக் மஹிந்த்ரா வங்கிக்கு மத்திய பென்சன் கணக்கு அலுவலகம் (CPAO) அனுமதி வழங்கியுள்ளது” என்பதை தெரிவித்துள்ளது.

பென்சன் விநியோகிக்கும் வங்கிக்கும், பென்சன் வழங்கும் ஆணையத்துக்கும், பென்சன் பெறும் நபருக்கும் இடையேயான இணைப்பாக மத்திய பென்சன் கணக்கு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. எந்தவொரு வங்கியும் பென்சன் விநியோக சேவைகளை தொடங்க வேண்டுமெனில் மத்திய பென்சன் கணக்கு அலுவலகத்திடம் அனுமதி பெற வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு!
இந்நிலையில், பென்சன் விநியோக சேவைகளை தொடங்க கோட்டக் மஹிந்த்ரா வங்கிக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதனால் பென்சன் பெறும் ஓய்வூதியர்களுக்கு என்ன கிடைக்கும்?

இதுவரையில், பென்சன் பெறும் நபர்கள் கோட்டக் மஹிந்த்ரா வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும், கோட்டக் மஹிந்த்ரா வங்கி வாயிலாக பென்சன் தொகை பெற முடியாது. ஏனெனில், கோட்டக் மஹிந்த்ராவுக்கு பென்சன் விநியோகத்திற்கான அனுமதி இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், இனி கோட்டக் மஹிந்த்ரா வாடிக்கையாளர்கள் நேரடியாக சொந்த கணக்கு மூலமாகவே பென்சன் தொகை பெற்றுக்கொள்ளலாம். இதனால் வீண் அலைச்சலும், நேர விரயமும் தவிர்க்கப்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்