ஆப்நகரம்

வாடிக்கையாளர்களுக்கு இனி இந்த சேவை கிடையாது.. இந்த பேங்க்ல உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா?

யெஸ் பேங்க் தனது வாடிக்கையாளர்களுக்கு SMS அலர்ட் சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 29 Nov 2022, 12:17 pm
தனியார் வங்கியான யெஸ் பேங்க் (YES Bank) தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளது. அதாவது, யெஸ் பேங்க் தனது வாடிக்கையாளர்களுக்கு SMS அலர்ட் வசதியை நிறுத்தப்போவதாக தெரிவித்துள்ளது.
Samayam Tamil sms alert
sms alert


இதன்படி, டிசம்பர் 1ஆம் தேதி முதல் யெஸ் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு SMS அலர்ட் சேவை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எல்லா SMS அலர்ட்டுகளும் நிறுத்தப்படாது. குறிப்பிட்ட சில SMS சேவைகள் மட்டுமே நிறுத்தப்படுகின்றன.

SMS சேவை நிறுத்தம்

டிசம்பர் 1ஆம் தேதி முதல் யெஸ் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு வங்கி கணக்கு இருப்பு தொகை (Account Balance) பற்றிய விவரம் SMS அலர்ட்டாக வராது. எனினும், ரிசர்வ் வங்கி விதிமுறைகளின்படி வாடிக்கையாளர்களுக்கு கட்டாயமாக அனுப்பப்பட வேண்டிய SMS அலர்ட்டுகள் வழக்கம் போல வாடிக்கையாளர்களுக்கு வரும்.

டாட்டா பாய் பாய்.. இந்தியாவை விட்டு ஓடும் பணக்காரர்கள்!
சப்ஸ்கிரிப்ஷன் அலர்ட் சேவை

இதுபோக, வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டால், சப்ஸ்கிரிப்ஷன் அடிப்படையில் ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் தொடர்பான SMS அலர்ட் சேவையை பெற்றுக்கொள்ளலாம். இதுபோக, கணக்கில் சம்பளம் வந்தால் அலர்ட், அக்கவுண்ட் பேலன்ஸ் அலர்ட் போன்ற அலர்ட்டுகளும் SMS வழியாக வரும். இதிலேயே தினசரி அலர்ட், வாராந்தர அலர்ட், இரு வாரங்களுக்கு ஒருமுறை அலர்ட், 15 நாட்களுக்கு ஒரு அலர்ட் என சப்ஸ்கிரிப்ஷன் சேவைகள் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து யெஸ் பேங்க் வெளியிட்டுள்ள செய்தியில், டிசம்பர் 1ஆம் தேதி முதல் அக்கவுண்ட் பேலன்ஸ் பற்றிய SMS அலர்ட் சேவை நிறுத்திக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது. சப்ஸ்கிரிப்ஷன் அடிப்படையில் மற்ற SMS அலர்ட்டுகள் தொடர்ந்து வரும் எனவும் தெரிவித்துள்ளது.

பேலன்ஸ் தெரிந்துகொள்வது எப்படி?


அக்கவுட் பேலன்ஸ் பற்றிய SMS அலர்ட் சேவை நிறுத்தப்பட்டாலும், வாடிக்கையாளர்கள் அனைவரும் YES Mobile, YES Online, YES Robot ஆகிய சேவைகள் வாயிலாக வங்கி கணக்கில் உள்ள பேலன்ஸ் தொகை பற்றி தெரிந்துகொள்ளலாம் என யெஸ் பேங்க் தெரிவித்துள்ளது.

அலர்ட் பெற பதிவு செய்வது எப்படி?


  • YES Online தளத்தில் ஐடி, பாஸ்வோர்ட் வாயிலாக நுழையவும்..

  • அதில் இருக்கும் MENU பகுதியை கிளிக் செய்யவும்.

  • அதில் உள்ள Manage Profile பிரிவை தேர்வு செய்யவும்.

  • அதில் Alerts பகுதியை கிளிக் செய்யவும்.

  • Account type தேர்வு செய்யவும்.

  • அதில் அலர்ட் பெற பதிவு செய்துகொள்ளலாம். மேலும், ஏற்கெனவே அலர்ட் பெறுவோர் ரத்து செய்துகொள்ளலாம்.

  • என்னென்ன அலர்ட் வேண்டுமென தேர்வு செய்யவும்.

  • Save செய்து சமர்ப்பிக்கவும்.
வாடிக்கையாளர்களுக்கு கட்டாயமாக அனுப்பப்பட வேண்டிய அலர்ட்டுகள் என ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கியுள்ள அலர்ட்டுகள் யெஸ் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து வரும்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்