ஆப்நகரம்

தனியார் பால் விலை இன்று முதல் உயர்வு

தனியார் பால் நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ள நிலையில், பால் விலை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்ந்துள்ளது.

TNN 6 Mar 2017, 8:36 am
சென்னை: தனியார் பால் நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ள நிலையில், பால் விலை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்ந்துள்ளது.
Samayam Tamil private milk price hike effective from today
தனியார் பால் விலை இன்று முதல் உயர்வு


பாலுக்கான கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறி, ஆந்திராவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டோட்‌லா, திருமலா, ஜெர்சி, ஹெரிடேஜ் உள்ளிட்ட பால் நிறுவனங்கள், பால் மற்றும் தயிர் விலையை உயர்த்தியுள்ளன.

அதன்படி, பால் விலை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்ந்துள்ளது. அதேபோல், ஒரு லிட்டர் தயிர் ரூ.50-ல் இருந்து 55-ஆகவும், 200 மில்லி பாக்கெட் ரூ.10-ல் இருந்து ரூ.11-ஆகவும் உயர்கிறது.

பால் விலை உயர்வு காரணமாக ஹோட்டல்கள், தனியார் நிறுவன உணவு விடுதிகளில் காபி மற்றும் டீ விலை உயர வாய்ப்புள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

தனியார் பால் நிறுவனங்களின் இந்த விலை உயர்வுக்கு பால் முகவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அரசு நிறுவனமான ஆவின் தினமும் சுமார் 15 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்து வரும் நிலையில், அத்தியாவசிய தேவையான பாலின் தேவையை சமாளிப்பதில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Private milk price hike, effective from today

அடுத்த செய்தி

டிரெண்டிங்