ஆப்நகரம்

தனியார் துறை ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்.. ஜூலை 1 முதல் சம்பளம் குறைப்பு?

புதிய ஊதிய விதி அமலுக்கு வருவதால் கையில் வாங்கும் சம்பளம் குறையும்!

Samayam Tamil 29 Jun 2022, 11:46 am
தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் Take Home Salary குறையப் போகிறது. ஆனால் இதில் நன்மையும் இருக்கிறது. நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான தகவல்..!
Samayam Tamil private sector employees take home pay going to reduce from july month check what is the reason
தனியார் துறை ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்.. ஜூலை 1 முதல் சம்பளம் குறைப்பு?


புதிய ஊதிய விதி!

மத்திய அரசின் உத்தரவுப்படி, வருகிற ஜூலை மாதம் முதல் புதிய ஊதிய விதி அமலுக்கு வருகிறது. இது தனியார் துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சம்பளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஏனெனில், இந்த விதி அமலுக்கு வந்த பிறகு அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கான ஊதியப் பட்டியலை மாற்றியமைக்க வேண்டும். இதனால் ஊழியர்கள் கையில் வாங்கும் (take home salary) சம்பளத்தின் அளவு குறையும்.

முக்கியமான மாற்றம்!

புதிய ஊதிய விதியின்படி, ஊழியர்களுக்கான கிராஜுவிட்டி (gratuity), பிஎஃப் போன்ற அனைத்து கொடுப்பனவுகளும் (Allowance) மொத்த சம்பளத்தில் 50 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது. நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கான மொத்த சம்பளத்தில் 50 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட அடிப்படை சம்பளத்தை வைத்திருக்க வேண்டும்.

நன்மையும் இருக்கிறது!

அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதன் மூலம் கிராஜுவிட்டியின் அளவும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கிராஜுவிசுட்டி தவிர நிறுவனம் மற்றும் ஊழியர்களின் பிஎஃப் பங்களிப்பும் இனி அதிகரிக்கும். இது நீண்ட காலத்திற்கு ஊழியர்களின் சேமிப்பையும் அதிகரிக்கும் என்பதால் இது வரவேற்பைப் பெற்றுள்ளது.

கவலை வேண்டாம்!

புதிய விதியின்படி, ஜூலை மாதத்துக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் நீங்கள் வாங்கும் சம்பளம் குறைந்தாலும் நீண்ட கால அடிப்படையில் உங்களுக்குப் பெரிய தொகை கிடைக்கும். இருப்பினும் கையில் வாங்கும் மாதச் சம்பளம் குறைந்தால் நெருக்கடி ஏற்படும் என்று ஒரு தரப்பினர் கவலை தெரிவித்துள்ளனர். ஆனால் கடைசிக் காலத்தில் கிடைக்கும் பலன் அதிகமாக இருக்கும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்