ஆப்நகரம்

பொதுத் துறை வங்கிகளுக்கு மத்திய அரசு நிதியுதவி!

நடப்பு நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகளுக்கு 2.72 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Samayam Tamil 14 Sep 2020, 8:32 pm
இந்திய வங்கிகள் நீண்ட காலமாகவே வாராக் கடன் பிரச்சினைகளால் தவித்து வருகின்றன. கோடிக் கணக்கில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்வதும், போலியான ஆவணங்களைக் கொண்டு கடன் வாங்கிவிட்டு நாட்டை விட்டே தப்பியோடுவதும் அதிகரித்துவிட்டது. அதுவும் இப்போது கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து ஈஎம்ஐ செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டது போன்ற காரணங்களால் இந்திய வங்கிகள் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளன. குறிப்பாக பொதுத் துறை வங்கிகள் தொடர்ந்து இயங்க முடியாமல் தத்தளிக்கின்றன.
Samayam Tamil bank


வங்கியில் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத கணக்குகளின் கடனை மறுசீரமைப்பு செய்ய மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல, பங்குகள் மற்றும் பத்திர விற்பனை மூலம் அதிகளவிலான நிதியைத் திரட்ட வங்கிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு சுமார் ரூ.20,000 கோடி அளவிலான நிதியை வழங்க முடிவு செய்துள்ளது. இது டாலர் மதிப்பீட்டில் 2.72 பில்லியன் டாலர் ஆகும். இதற்கான இறுதி ஒப்புதல் பெற நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி இழப்பீடு: 13 மாநிலங்கள் ஒப்புதல்!

கொரோனாவால் ஏற்படும் வராக்கடனைச் சமாளிக்க கடந்த ஏப்ரல் மாதமே பொதுத்துறை வங்கிகளுக்கு நிதியுதவி அளிப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. நாட்டின் பொருளாதாரத்தையும், வங்கியின் நிதிநிலையையும் வாராக் கடன் பிரச்சினை மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என்பதால் பொதுத்துறை வங்கிகளுக்கு உதவி செய்ய மத்திய அரசு முன்வந்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2020 மார்ச் மாத நிலவரப்படி 8.5 சதவீதமாக இருக்கும் வராக்கடன் கொரோனாவால் ஏற்பட்ட வர்த்தகம் மற்றும் பொருளாதார பாதிப்பால் 12.5 சதவீதமாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில்தான் வாராக் கடன் பிரச்சினையைச் சமாளிக்க மத்திய அரசு நிதியுதவி வழங்க முடிவுசெய்து, அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்