ஆப்நகரம்

அதானிக்கு இன்னும் கடன் கொடுப்போம்.. பொதுத்துறை வங்கி தடாலடி!

அதானிக்கு கூடுதல் கடன்கள் வழங்க தயாராக இருப்பதாக பாங்க் ஆஃப் பரோடா வங்கி தெரிவித்துள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 20 Feb 2023, 12:19 pm
அதானி குழுமம் கணக்கு மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் ஆய்வு நிறுவனம் ஜனவரி 24ஆம் தேதி ஆய்வறிக்கையை வெளியிட்டது. இதன்பிறகு அதானி நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன.
Samayam Tamil adani - bank of baroda
adani - bank of baroda


அதானி பங்குகள் சரிந்ததால் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. உலக பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அதானி நிறுவனங்களுக்கு எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் அளவுக்கு மீறி கடன்களை கொடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. எஸ்பிஐ மட்டுமல்லாமல் பாங்க் ஆஃப் பரோடா போன்ற பொதுத்துறை வங்கிகள் ஏற்கெனவே அதானிக்கு கடன் வழங்கியுள்ளன.

இந்நிலையில், ஹிண்டென்பர்க் சர்ச்சைக்கு பிறகும் கூட அதானி குழுமத்துக்கு கூடுதலாக கடன்களை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக பாங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) வங்கியின் தலைவர் சஞ்சீவ் சத்தா தெரிவித்துள்ளார்.

அதானி குழுமத்துக்கு கூடுதல் கடன் வழங்குவதற்கு, அந்நிறுவனத்திடம் போதிய வருமானமும், சொத்துகளும் இருந்தால் போதும் எனவும், கடன் வழங்குவதற்கான தரநிலைகளை சந்தித்தால் அதானிக்கு கூடுதல் கடன் வழங்குவதற்கு தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தால் அதானி பங்குகள் சரிந்தது பற்றி தனக்கு கவலை இல்லை எனவும், கடன் வழங்குவதற்கான தகுதி அதானி குழுமத்துக்கு இருந்தால் கூடுதல் கடன்கள் வழங்கப்படும் என பாங்க் ஆஃப் பரோடா தலைவர் சஞ்சீவ் சத்தா தெரிவித்துள்ளார். நல்ல நேரம், கெட்ட நேரம் இரண்டிலுமே கடனுக்கான தரநிலைகளை கடைப்பிடித்தால் போதும் என அவர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் தாராவி சேரியை மேம்படுத்துவதற்கான திட்டம் அதானி குழுமத்துக்கு கிடைத்துள்ளது. இந்த திட்டத்தின் மதிப்பு 50.7 பில்லியன் ரூபாய். இத்திட்டத்துக்கு கடன் வழங்குவதற்கான தகுதி அதானி குழுமத்துக்கு இருதால் கூடுதல் கடன்கள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்