ஆப்நகரம்

தனியாரிடம் செல்லும் பொதுத் துறை வங்கிகள்!

அரசு வங்கிகளின் எண்ணிக்கையை ஐந்தாகக் குறைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 22 Jul 2020, 9:14 pm
நீண்ட காலமாகவே வாராக் கடன் பிரச்சினைகளாலும் போதிய மூலதனம் இல்லாமலும் இந்திய வங்கிகள் தவித்து வருகின்றன. இதனால் வங்கித் துறையை மீட்டெடுக்கும் முயற்சியில் நலிந்த பொதுத் துறை வங்கிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியது. இதன்படி, பத்து பொதுத் துறை வங்கிகளை ஒன்றிணைக்க முடிவு செய்யப்பட்டது. யுனைட்டட் பேங்க் ஆஃப் இந்தியா, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமெர்ஸ், சிண்டிகேட் பேங்க் கனரா பேங்க், அலகாபாத் பேங்க், ஆந்திரா பேங்க், கார்பரேசன் பேங்க் உள்ளிட்ட 10 வங்கிகள் நான்கு வங்கிகளாக இணைக்கப்பட்டன.
Samayam Tamil bank


இந்நிலையில், பொதுத் துறை வங்கிகளின் எண்ணிக்கையை மேலும் குறைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பொதுத் துறை வங்கிகளில் பாதி அளவு தனியார் மயமாக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இத்திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக, செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், யூசிஓ பேங்க், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, பஞ்சாப் & சிந்த் பேங்க் ஆகிய வங்கிகளின் பங்குகளைக் கொஞ்சம் கொஞ்சமாக விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இறுதியில் இவ்வங்கிகள் தனியார் வசம் வழங்கப்படும்.

வீட்டிலிருந்தே வேலை: ஐபிஎம் நிர்வாக அதிகாரியுடன் மோடி பேச்சு!

நான்கு அல்லது ஐந்து பொதுத் துறை வங்கிகள் இருந்தால் போதும் என்று முடிவுசெய்யப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். தற்போதைய நிலையில் 12 பொதுத் துறை வங்கிகள் இருக்கும் நிலையில் அதில் பாதிக்கு மேல் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது. வங்கித் துறையில் இந்த தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்காக புதிய தனியார்மயக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அதற்கு ஒப்புதல் கிடைத்துவிடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஊதியம் இல்லா விடுப்பு... காண்டான ஏர் இந்தியா ஊழியர்கள்!

இந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகள் 7 பெரிய வங்கிகளாக உருவாக்கப்பட்டு, தேசிய அளவில் 8 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னர் கூறியிருந்தார். இந்தப் பெரும் இணைப்பால் உலகளாவிய வங்கிகளுடன் ஒப்பிடும் அளவுக்கு இந்திய வங்கிகள் உயரும் எனவும், இந்திய அளவிலும் உலக அளவிலும் போட்டியிட முடியும் எனவும் அவர் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்