ஆப்நகரம்

இனி ஒரே பென்சன் திட்டம்தான்.. அரசு எடுத்த முக்கிய முடிவு!

ஒரே பென்சன் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த மாநில அரசு.

Samayam Tamil 3 May 2022, 2:56 pm
எல்லா எம்.எல்.ஏக்களுக்கும் ஒரே பென்சன் தொகை வழங்குவதற்கான புதிய திட்டத்துக்கு பஞ்சாப் மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் இனி ஒரே பென்சன் தொகைதான் வழங்கப்படும். இதனால் அரசுக்கும் நிறைய பணம் மிச்சமாகும்.
Samayam Tamil punjab cabinet approves one mla one pension scheme how does this benefit former lawmakers
இனி ஒரே பென்சன் திட்டம்தான்.. அரசு எடுத்த முக்கிய முடிவு!


​பழைய பென்சன் முறை

பஞ்சாபில் இதற்கு முன்பு வரை முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கு பென்சன் வழங்கும்போது அவர்கள் எத்தனை முறை எம்.எல்.ஏவாக பொறுப்பு வகித்தார்களோ அதற்கு ஏற்ப பென்சன் வழங்கப்பட்டு வந்தது.

​ஆட்சி மாற்றம்

கடந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது. ஆம் ஆத்மி தனது தேர்தல் அறிக்கையில் எம்.எல்.ஏ பென்சன் திட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரும் என வாக்குறுதி அளித்தது. இந்நிலையில் அதற்கான நடவடிக்கையை பஞ்சாப் அரசு மேற்கொண்டுள்ளது.

​ஒரே எம்.எல்.ஏ, ஒரே பென்சன்

வாக்குறுதிக்கு ஏற்ப ‘ஒரே எம்.எல்.ஏ, ஒரே பென்சன்’ திட்டத்தை பஞ்சாப் அரசு கொண்டுவந்துள்ளது. இத்திட்டத்துக்கு பஞ்சாப் அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தால் ஒவ்வொரு ஆண்டும் பஞ்சாப் அரசுக்கு 19.53 கோடி ரூபாய் செலவு மிச்சமாகும்.

​புதிய பென்சன் திட்டம்

பஞ்சாபில் தற்போது சுமார் 300 முன்னாள் எம்.எல்.ஏக்கள் பென்சன் பெற்று வருகின்றனர். புதிய பென்சன் திட்டத்தின்படி இவர்களுக்கு இனி மாதம் 60,000 ரூபாய் பென்சனும், அகவிலைப்படியாக 1.2 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.

​பழைய பென்சன்

இதற்கு முன்பு முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கு ஒரு பதவிக்காலத்துக்கு 75000 ரூபாய் வழங்கப்படும். ஒரு முறைக்கு மேல் எம்.எல்.ஏவாக இருந்தவர்களுக்கு ஒவ்வொரு பதவிக்காலத்துக்கும் 50,000 ரூபாய் வழங்கப்படும்.

​6 லட்சம் பென்சன்

உதாரணமாக, அகாலி தள கட்சியின் தலைவரும், முன்னாள் பஞ்சாப் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல் 10 முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். இவருக்கு இதுவரை மாதம் 6 லட்சம் ரூபாய் பென்சன் வழங்கப்பட்டு வந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்