ஆப்நகரம்

Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம் இல்லை.. கடுப்பில் அரசு ஊழியர்கள்!

ஆட்சி மாறிய பிறகும் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து நடவடிக்கை எடுக்காததால் மாநில அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் போராட்டம்.

Samayam Tamil 1 Jul 2022, 11:32 am
ஆட்சி மாறியபிறகும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படவில்லை என பஞ்சாப் அரசு ஊழியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், பஞ்சாப் அரசுக்கு எதிராக பல்வேறு இடங்களில் அதிரடியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil punjab government employees protest after state government failed to bring resolution on old pension scheme
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம் இல்லை.. கடுப்பில் அரசு ஊழியர்கள்!


​பழைய ஓய்வூதிய திட்டம்

2003ஆம் ஆண்டு வரை மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. இதில் அரசு ஊழியர்களுக்கு நிலையான ஓய்வூதியம் உள்பட பல்வேறு பலன்கள் கிடைத்தன.

​புதிய ஓய்வூதிய திட்டம்

பின்னர் 2004ஆம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு தேசிய பென்சன் திட்டம் (National Pension System) அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போதும் அரசு ஊழியர்களு தேசிய பென்சன் திட்டமே நடைமுறையில் உள்ளது.

​ஓய்வூதியம் இல்லை

பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைத்து வந்ததுபோல தேசிய பென்சன் திட்டத்தில் ஓய்வூதியத்துக்கு உத்தரவாதம் கிடையாது.

​சலுகைகள் இல்லை

பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைத்து வந்த பல்வேறு சலுகைகளும், பலன்களும் தேசிய பென்சன் திட்டத்தில் இல்லை.

​அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு

இதனால் தேசிய பென்சன் திட்டத்தை மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

​தேர்தல் வாக்குறுதி

பஞ்சாபில் தற்போது ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு முன்பாக, பஞ்சாபில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என ஆம் ஆத்மி வாக்குறுதி அளித்தது. இதனால் அரசு ஊழியர்களின் ஆதரவும் ஆம் ஆத்மிக்கு கிடைத்தது.

​பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி அறிவிப்பில்லை

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான தீர்மானத்தை பஞ்சாப் அரசு கொண்டுவரவில்லை. இதனால் பஞ்சாப் அரசு ஊழியர்கள் பெரும் அதிருப்திக்கு ஆளானார்கள்.

​அரசு ஊழியர்கள் போராட்டம்

பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான தீர்மானத்தை அரசு கொண்டுவராததால் ஜலந்தரில் அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். ஆம் ஆத்மி கட்சி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

நிதியமைச்சரே இப்படி செய்யலாமா?

தற்போது பஞ்சாப் நிதியமைச்சராக இருக்கும் ஹர்பால் சிங் சீமா ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினார். இந்நிலையில் அவரே தற்போது ஏமாற்றம் அளிக்கும் வகையில் செயல்பட்டுள்ளதாக பஞ்சாப் அரசு ஊழியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்