ஆப்நகரம்

ஏடிஎம்மில் பணம் எடுத்தீங்களா? கோடிக் கணக்கில் வசூல் வேட்டை!

வாடிக்கையாளர்களிடம் ரூ.645 கோடி வசூல் செய்துள்ளது பஞ்சாப் நேஷனல் பேங்க்.

Samayam Tamil 23 May 2022, 11:51 am
வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் குறிப்பிட்ட ஒரு தொகையை தங்களது கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக வைத்திருக்க வேண்டும். அப்படி குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் குறிப்பிட்ட தொகையை அபராதமாக வசூலிக்கும். அதேபோல, ஏடிஎம் பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு பரிவர்த்தனைகளுக்கும் வங்கிகள் வெவ்வேறு வகையில் கட்டணம் வசூலிக்கின்றன.
Samayam Tamil atm


இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கிகள் ஒன்றான பஞ்சாப் நேஷனல் பேங்க் தனது வாடிக்கையாளர்களிடம் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு வசூலித்த கட்டணம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, 2021-22 நிதியாண்டில் ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணமாக ரூ.645.67 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.

இதுமட்டுமல்லாமல், மினிமம் பேலன்ஸ் வைத்திருக்காத வாடிக்கையாளர்களிடம் அபராதத் தொகையாக ரூ.239.09 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த மினிமம் பேலன்ஸ் அபராதம் மாதாந்திர, காலாண்டு அடிப்படையில் வசூல் செய்யப்படும். ஏடிஎம் பரிவர்த்தனைக்கான கட்டணங்கள் மாதம் ஒன்றுக்கு வரம்பைத் தாண்டி செல்லும் போது வசூல் செய்யப்படுகிறது. ஒரு மாதத்துக்கு இத்தனை முறைதான் ஏடிஎம்களில் இலவசமாகப் பணம் எடுக்க முடியும் போன்ற விதிமுறைகள் உள்ளன. அதைத் தாண்டும்போது கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இனி ஏடிஎம் கார்டே தேவையில்லை.. வங்கிகளுக்கு ரிசர்வ் பேங்க் உத்தரவு!

2020-21 நிதியாண்டில் பஞ்சாப் நேஷனல் பேங்க் ரூ.170 கோடி வசூல் செய்திருந்தது. மொத்தம் 85.18 லட்சம் கணக்குகளில் இந்த வசூல் நடந்துள்ளது. ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்குகளைப் பொறுத்தவரையில், 2022 மார்ச் 31 வரையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மொத்தம் 67,637,98 ஜீரோ பேலன்ஸ் கணக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்