ஆப்நகரம்

பெண்கள் லாபம் பெற உதவும் அதிசய திட்டங்கள்!

பெண்கள் பயன்பெறுவதற்காக பஞ்சாப் நேஷனல் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள பல்வேறு திட்டங்களை பற்றி பார்க்கலாம்.

Samayam Tamil 18 Oct 2020, 5:11 pm

பெண்கள் பயனடைவதற்காகவே பஞ்சாப் நேஷனல் வங்கி பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பெண்கள் நிதித் தன்னிறைவை அடைவதற்காக பவர் சேமிப்பு கணக்கு திட்டத்தை பஞ்சாப் நேஷனல் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
Samayam Tamil Women Personal Finance (Photo: gettyimages)


இத்திட்டத்தின் கீழ் பெண்கள் சேமிப்புக் கணக்கு துவங்கலாம். கூட்டு சேமிப்பு கணக்கும் (Joint account) துவங்கலாம். எனினும், கூட்டு கணக்கில் முதல் பெயர் பெண்ணுடையதாக இருக்க வேண்டும். கிராமப்புறம், நகர்ப்புறம் என அனைத்து பகுதிகளை சேர்ந்த பெண்களும் இந்த கணக்கை துவக்கலாம்.

LIC வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்: மிஸ் பண்ணிடாதிங்க!

தொடக்கத்தில் 500 ரூபாய் வைத்து கணக்கு திறக்கலாம். நகர்ப்புறங்களில் 2000 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். சிறு நகரங்களில் 1000 ரூபாய் டெபாசிட் செய்யலாம். இத்திட்டத்தை ஒரு பெண் பயன்படுத்த வேண்டுமெனில் அவர் இந்திய குடியுரிமை பெற்றிருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் டெபிட் கார்டு, 50 ஆண்டுக்கான செக் புக், இலவச நெஃப்ட், இலவச SMS சேவை, 5 லட்சம் ரூபாய் வரை இலவச விபத்து மரணக் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் கிடைக்கும். ஒரு நாளுக்கு 50000 ரூபாய் வரை பணம் எடுக்கலாம்.

இதேபோல பெண்கள் சுய தொழில் செய்வதற்காக மகிளா உதயம் நிதி திட்டத்தையும் பஞ்சாப் நேஷனல் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்கீழ், தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு கடன் வழங்கப்படுகிறது.

மேலும், பஞ்சாப் நேஷனல் வங்கியின் மகிளா சம்ரிதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் உள்கட்டமைப்பு, ஆலை அமைப்பு போன்ற தொழில் தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வழங்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்