ஆப்நகரம்

தனியார் ஊழியர்களுக்கு பெரும் ஆபத்து.. 50% நிறுவனங்கள் எடுக்கும் முடிவு.. காலியாகும் வேலைவாய்ப்புகள்!

உலகின் 50% நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

Samayam Tamil 19 Aug 2022, 4:09 pm
உலகில் உள்ள பாதி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், ஊழியர்களுக்கான போனஸ் உள்ளிட்ட சலுகைகளை குறைக்கவும், புதிய ஊழியர்களை பணியமர்த்துவதை குறைக்கவும் திட்டமிட்டுள்ளதாக ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.
Samayam Tamil Layoffs


PwC நிறுவனம் 'Pulse: Managing business risks in 2022' என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், 50% நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளதாக எச்சரித்துள்ளது. இதற்கு சான்றாக, பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களே ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றன.

இந்த அறிக்கையில், உலகளவில் 50% நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும், 46% நிறுவனங்கள் ஊழியர்களுக்கான போனஸ் சலுகைகளை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும், 44% நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளையே குறைக்க திட்டமிடுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐடி ஊழியர்களுக்கு நல்ல காலம் பொறக்குது.. சம்பள உயர்வு மட்டுமில்ல.. இவ்வளவு சலுகைகளா!
அமெரிக்காவில் மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், டெஸ்லா, நெட்ஃபிக்ஸ், நிவிடியா, மெட்டா என பல்வேறு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளன. இதுபோக கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

பெரிய நிறுவனங்களின் நிலைமையே இப்படி என்றால், நடுத்தர நிறுவனங்கள் மற்றும் சிறு நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களின் நிலை என்னாகும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்தியாவிலும் நிறைய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வெளியேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்