ஆப்நகரம்

நீ மட்டும் போதும்.. ரத்தன் டாடாவின் அந்த ‘ஒருவர்’ யார்?

டாடா முன்னாள் தலைவர் ரத்தன் டாடா இன்ஸ்டாகிராமில் தொடரும் அந்த ஒரே ஒருவர் யார்?

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 10 Mar 2023, 12:26 pm
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (Ratan Tata) டாடா குழுமத்தின் வளர்ச்சியிலும், அடுத்த பாய்ச்சலிலும் முக்கிய பங்கு வகித்தவர். அவர் தலைமையில் டாடா குழுமம் வாகனங்கள், ஐடி என பல்வேறு துறைகளில் கால்தடம் பதித்து வளர்ச்சியும் பெற்றுவிட்டது.
Samayam Tamil Ratan tata
Ratan tata


தற்போது ரத்தன் டாடா ஓய்வுக்காலத்தில் இருக்கிறார். டாடா குழுமத்தின் பிசினஸில் ரத்தன் டாடா அதிக கவனம் செலுத்துவதில்லை. மாறாக உடல்நலனில் அவர் அக்கறை காட்டுவதாக தெரிவித்துள்ளார். மேலும், தொண்டு பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதுபோக இளைஞர்களின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார்.

ரத்தன் டாடா இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் புகழ்பெற்றவர். சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ரத்தன் டாடாவை 8.5 மில்லியன் நபர்கள் பின் தொடருகின்றனர். ஆனால், ரத்தன் டாடாவோ ஒரே ஒருவரை மட்டுமே பின் தொடருகிறார். அப்படி யாரைத்தான் ரத்தன் டாடா பின் தொடருகிறார்?

டாடா அறக்கட்டளையை (Tata Trusts) மட்டுமே ரத்தன் டாடா பின் தொடருகிறார். டாடா குழுமத்தின் தொண்டு பிரிவுதான் டாடா அறக்கட்டளை. டாடாவின் தொழில்களில் ரத்தன் டாடா கவனம் செலுத்தாவிட்டாலும், அறக்கட்டளையில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார்.

இந்த டாடா அறக்கட்டளையின் வரலாறு என்ன? அதை தெரிந்துகொள்ள 130 ஆண்டுகளுக்கு பின்னே செல்ல வேண்டும். டாடா குழுமத்தின் நிறுவனர் ஜாம்ஷெட்ஜி டாடா இன்றளவிலும் தொழில்முனைவோருக்கு பெரும் உந்துசக்தியாக இருப்பவர். 1892ஆம் ஆண்டில் ஜேஎன் டாடா நன்கொடை நிதியை (JN Tata Endowment Fund) ரத்தன் டாடா தொடங்கினார்.

இந்தியர்கள் உயர்கல்வி பெறுவதற்கு உதவுவதே இந்த நன்கொடை நிதியின் நோக்கம். அந்த காலத்திலேயே பயிற்சி பணிகள், குழந்தைகளுக்கான பகல் நேர காப்பகம், மில்லில் வேலைசெய்யும் பெண் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு ஆரம்பக் கல்வி, அனைத்து ஊழியர்களுக்கும் இலவச மருத்துவம், பென்சன் நிதி, வருங்கால வைப்பு நிதி, கர்ப்பகால பலன்கள், விபத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு என பல்வேறு வசதிகளை செய்துகொடுத்தார் ஜாம்ஷெட்ஜி டாடா.

ஜாம்ஷெட்ஜி டாடா அன்று விதைத்த ஜேஎன் டாடா நன்கொடை நிதியே இன்று டாடா அறக்கட்டளை என்ற ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. 1919ஆம் ஆண்டில் ரத்தன் டாடா, டாடா அறக்கட்டளையை 80 லட்சம் ரூபாய் நிதியுடன் தொடங்கினார். இன்றும் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தொண்டு பணிகளை டாடா அறக்கட்டளை செய்து வருகிறது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்