ஆப்நகரம்

ரேஷன் கார்டு ஏடிஎம்... இனி வரிசையில் காத்திருக்கும் பிரச்சினை இல்லை!

24 மணி நேரமும் ஏடிஎம் மூலமாக ரேஷன் பொருட்களை வாங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 24 Feb 2021, 4:17 pm
நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையிலும் இலவசமாகவும் ரேஷன் பொருட்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் வெகுவாகப் பயன்பெற்று வருகின்றனர். கொரோனா போன்ற பிரச்சினைகள் இருக்கும் காலத்தில் நிதி நெருக்கடி நிலவும்போது ரேஷன் திட்டத்தின் வாயிலாக பல்வேறு உதவிகளை மத்திய அரசும் மாநில அரசுகளும் வழங்கி வருகின்றன. மேலும் ஒரு சிறப்பு வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரேஷன் பொருட்களை எப்போது வேண்டுமானாலும் மக்கள் ஏடிஎம் மெஷின்களில் எடுத்துக்கொள்ளலாம்.
Samayam Tamil ration


மெஷின்கள் வாயிலாக ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் இத்திட்டத்தின் ஆரம்பக்கட்ட பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. சோதனை ஓட்டமாக சில இடங்களில் இந்த மெஷின்கள் நிறுவப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில், கர்நாடகா, ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இத்திட்டம் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அடுத்த கட்டமான டெல்லி, குஜராத் ஆகிய இடங்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.

வீடு இல்லாதவர்களுக்கு சூப்பர் நியூஸ்... மத்திய அரசு அறிவிப்பு!
இத்திட்டத்தின் மூலமாக வாடிக்கையாளர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு ரேஷன் பொருட்களை எப்போது வேண்டுமானாலும் மெஷின்கள் மூலமாக எடுத்துக்கொள்ளலாம். பயோமெட்ரிக்ஸ் மூலமாக வாடிக்கையாளரை மெஷின் அடையாளம் கண்டவுடன் அவர்களுக்கான ரேஷன் பொருட்களை நிர்ணயிக்கப்பட்ட அளவில் மெஷின்கள் வழங்கும். ரேஷன் பொருட்களை வாங்குபவர்களுக்கு ஏடிஎம் வடிவிலான ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும். இதன் மூலம் ரேஷன் கடைகளில் மணிக் கணக்கில் காத்துக்கிடப்பது தவிர்க்கப்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்