Ration Card Holders Are Unhappy As Now Onwards They Will Get Less Rice On This State
ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு அதிர்ச்சி.. இனி கம்மியாகவே பொருட்கள் கிடைக்கும்!
என்ன இப்படி ஆகிருச்சு!!
Authored byசெந்தில் குமார் | Samayam Tamil21 Jan 2023, 7:34 am
ரேஷன் அட்டைதாரர்களுக்கு குறைந்த அளவில் அரிசி வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல, நிறையப் பேரின் பெயர்களும் ரேஷன் கார்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு!
நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு தரப்பிலிருந்தும் மாநில அரசு சார்பாகவும் ரேஷன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றனர். உணவுப் பொருட்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்படுகின்றன. உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல், வேட்டி - சேலை, நிதியுதவி போன்ற உதவிகளும் கிடைக்கின்றன. ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு மட்டுமே இந்த உதவிகள் கிடைக்கும்.
அட்டைதாரர்கள் அதிர்ச்சி!
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு பெரிய செய்தி வந்துள்ளது. இலவச ரேஷன் வாங்குபவராக இருந்தால் ரேஷன் கார்டு விதிகளில் பெரிய மாற்றத்தை அரசு கொண்டுவந்துள்ளது. மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசும் முக்கிய முடிவு எடுத்துள்ளது. இனி நிறையப் பேருக்கு முன்பை விட குறைவான ரேஷன் மட்டுமே கிடைக்கும்.
குறைவான அரிசி!
ரேஷன் கார்டு விதிகளை மாற்றும் போது அரிசி ஒதுக்கீட்டை குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. இனி தெலங்கானா மாநிலத்தின் லட்சக்கணக்கான பயனாளிகளுக்கு முன்பை விட 1 கிலோ அரிசி குறைவாக கிடைக்கும். தெலுங்கானா அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. அரிசி விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
rationபெயர்கள் நீக்கம்!
ரேஷன் கார்டுதாரர்களுக்கு புதிய இலவச எண்ணை ஹரியானா அரசு வெளியிட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் பலரது பெயர்கள் ரேஷன் கார்டுகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. ஒருவேளை தவறுதலாகப் பெயர் நீக்கப்பட்ட பயனாளிகளின் குறைகளை கேட்டு அதற்குத் தீர்வுகாண இரண்டு எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
சிறப்பு எண்கள்!
ஹரியானா அரசு 1967 மற்றும் 1800 180 287 ஆகிய எண்களை வெளியிட்டுள்ளது. இந்த எண்களில் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். இந்த எண்களில் புகார்களை பதிவு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
கூடுதலாக செலவு!
பெயர் நீக்கம் போன்ற பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க, ஏழைகளின் வசதிகளை மனதில் வைத்து சிறப்பு வசதியை இந்த ஆண்டு மத்திய அரசு தொடங்கியுள்ளது. உணவு மானியம் என்ற வகையில், இந்த ஆண்டு அதாவது 2023ஆம் ஆண்டில் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அரசு செலவழிக்கிறது. இதனால் ஏழை மக்கள் உணவைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க
We use cookies and other tracking technologies to provide services in line with the preferences you reveal while browsing the Website to show personalize content and targeted ads, analyze site traffic, and understand where our audience is coming from in order to improve your browsing experience on our Website. By continuing to browse this Website, you consent to the use of these cookies. If you wish to object such processing, please read the instructions described in our privacy policy/cookie policy.