ஆப்நகரம்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பெரும் நிம்மதி... இனி ஏமாற்றவே முடியாது!

எடை விஷயத்தில் ஏமாற்ற முடியாது!

Samayam Tamil 15 May 2022, 12:02 am
ரேஷன் கடைகளில் மோசடிகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரானிக் எடை மெஷின்கள் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Samayam Tamil ration card update govt made it mandatory to deploy electronic point of sale devices at the ration shops
ரேஷன் அட்டைதாரர்களுக்கு பெரும் நிம்மதி... இனி ஏமாற்றவே முடியாது!


ரேஷன் கார்டு!

ரேஷன் கார்டுகள் மூலமாக நாட்டு மக்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

அதிகரிக்கும் மோசடிகள்!

ஒருபுறம் இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டாலும், இன்னொரு புறம் ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்குவதில் மோசடிகள் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. நிர்ணயிக்கப்பட்ட அளவை விடக் குறைவான அளவில் உணவு தானியங்கள் வழங்கப்படுவதாகப் பயனாளிகள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது.

விதிமுறைகள் மாற்றம்!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அடுத்தடுத்து முக்கியமான அப்டேட்கள் வந்துகொண்டிருக்கின்றன. மத்திய அரசின் இலவச ரேஷன் திட்டம் முதலில் நீட்டிக்கப்பட்டது. இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அடுத்து, ரேஷன் கார்டுகளை பயன்படுத்தாமல் வைத்திருந்தால் அதை ரத்து செய்வது தொடர்பான விதிமுறை வெளியானது.

அரசு நடவடிக்கை!

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் ரேஷன் கார்டில் புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, அனைத்து ரேஷன் கடைகளிலும் எலெக்ட்ரானிக் எடை மெஷின்கள் வைக்கப்படும். இதன் மூலம் மட்டுமே உணவு தானியங்கள் விநியோகம் செய்யப்பட வேண்டும். இதன் மூலம் உணவுப் பொருட்களை விநியோகம் செய்யும் மோசடிகள் கட்டுப்படுத்தப்படும்.

பயனாளிகள் மகிழ்ச்சி!

ரேஷன் கார்டு விஷயத்தில் அரசு தரப்பிலிருந்து நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. உணவு விநியோகச் சேவையில் எந்தப் பிரச்சினையும் ஏற்படக் கூடாது என்பதற்கான அரசு தரப்பிலிருந்து இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்ந்து பொதுமக்களின் நலனுக்கான ரேஷன் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதால் பயனாளிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்