ஆப்நகரம்

பழைய காசுக்கு பணம் கிடைக்குமா? ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!

அரிய வகை நாணயங்கள் மற்றும் நோட்டுகளை விற்பனை செய்து பணம் சம்பாதிக்கும் விஷயத்தில் ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கை இதுதான்...

Samayam Tamil 30 Oct 2021, 2:42 pm
இந்தியாவில் இப்போது நிறையப் பேர் பணம் சம்பாதிக்க மாற்று வழிகளைத் தேடியுள்ளனர். பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை விற்பனை செய்தால் கோடிக் கணக்கில் பணம் கிடைக்கும் என்று செய்திகளும் அதிகமாக வந்துகொண்டிருக்கின்றன. உண்மையில் நிறையப் பேர் இதன் மூலமாகப் பணம் சம்பாதித்துள்ளனர். இந்தியா மார்ட், OLX, குயிக்கர், ஈபே போன்ற முன்னணி வெப்சைட்களில் இதுபோன்ற நாணயங்களையும் நோட்டுகளையும் கொடுத்து லட்சங்களிலும் கோடிகளிலும் சம்பாதிக்கலாம்.
Samayam Tamil old coins


ஆனால் இதில் மோசடிகளும் நடைபெறுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில நபர்களும் நிறுவனங்களும் போலியான பெயரில் வெப்சைட் உருவாக்கி அதில் நாணயங்களை வாங்குவதாகக் கூறி தனிநபர்களின் தகவல் திருட்டில் ஈடுபடுவதாகத் தெரியவந்துள்ளது. எனவே இந்த விஷயத்தில் வாடிக்கையாளர்களாகிய பொதுமக்கள்தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுபோல பழைய நாணயங்களுக்கும் நோட்டுகளுக்கும் பணம் கிடைப்பது உண்மைதான் என்றாலும், அதில் ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட நபர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.

இந்த காசு மட்டும் இருந்தா போதும்! ரூ.10 லட்சம் சம்பாதிக்கலாம்!
இதுபோன்ற பரிவர்த்தனைகளுக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கவில்லை. இதுபோன்ற விற்பனைகளை ரிசர்வ் வங்கி ஆதரிக்கவும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. எனவே பழைய நாணயங்களுக்குப் பணம் கிடைத்தாலோ அல்லது பணத்தை இழந்தாலோ அதற்கு ரிசர்வ் வங்கி பொறுப்பாகாது. பணப் பரிவர்த்தனைக்கு ஆதாரமாக இருக்கும் வங்கிகளும் பொறுப்பாகாது. இந்த நாணயங்களை விற்பனை செய்பவர் மற்றும் அதை வாங்குபவர்கள்தான் கவனமுடன் செயல்பட வேண்டும்.

உங்ககிட்ட 2 ரூபாய் இருக்கா? 5 லட்சம் கிடைக்கும்!
எனவே இதுபோன்ற பழைய நாணயங்களை விற்பனை செய்யும் வெப்சைட்களை சரிபார்த்துவிட்டு அதன் பிறகு பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டால் நல்லது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்