ஆப்நகரம்

வங்கிக் கடன் கொடுத்துவிட்டு இம்சை பண்ணக்கூடாது.. ரிசர்வ் வங்கி அதிரடி தடை!

கடன் கொடுத்துவிட்டு வாடிக்கையாளர்களை துன்புறுத்திய நிதி நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 3 Mar 2023, 10:58 am
அண்மைக்காலமாக சில நிதி நிறுவனங்களும், ஆன்லைன் கடன் ஆப்களும் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டிக்கு கடன் கொடுத்துவிட்டு, கடனை திருப்பிக் கேட்பதற்கு வாடிக்கையாளரை மிரட்டுவது, அவமானப்படுத்துவது போன்ற மிக மோசமான செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. இந்நிலையில், இதுபோன்ற இம்சைகளை செய்துவந்த நிதி நிறுவனத்தின் பதிவுச் சான்றிதழை தடை செய்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil rbi bars rhino finance pvt ltd from carrying nbfc business operations due to violation and unfair business practices
வங்கிக் கடன் கொடுத்துவிட்டு இம்சை பண்ணக்கூடாது.. ரிசர்வ் வங்கி அதிரடி தடை!


ரைனோ பைனான்ஸ்

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இயங்கி வருகிறது ரைனோ பைனான்ஸ் பிரைவேட் லிமிட்டெட் (Rhino Finance Private Ltd) நிறுவனம். இந்நிறுவனம் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளதாகவும், டிஜிட்டல் கடன்களை வழங்குவதில் நியாயமின்றி செயல்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பதிவுச் சான்றிதழ் ரத்து

இந்நிலையில், ரைனோ பைனான்ஸ் நிறுவனத்தின் பதிவுச் சான்றிதழை ரத்து செய்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. பொது நலனுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் ரைனோ பைனான்ஸ் செயல்பட்டு வந்ததாகவும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளது.

அதிக வட்டி வசூல்

ரைனோ பைனான்ஸ் நிறுவனம் கடன்களுக்கு வட்டி வசூலிப்பதற்கான விதிமுறைகளையும் மீறி, அளவுக்கு அதிகமான வட்டிக்கு கடன் கொடுத்துள்ளதாகவும், கடன்களை வசூலிக்க போகும்போது வாடிக்கையாளர்களை துன்புறுத்தியுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஆன்லைன் கடன் ஆப்களுடன் கூட்டு

இந்த ரைனோ பைனான்ஸ் நிறுவனம் Hello loan, Credithub, KoKo cash, Flash loan, Bridge Loan, Crazy bee,Rupee bus போன்ற ஆன்லைன் கடன் ஆப்களுடனும் கூட்டு வைத்து செயல்பட்டுள்ளதாகவும், பதிவுச் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இனி ரைனோ பைனான்ஸ் நிறுவனம் வங்கி சாரா நிதி நிறுவனத்தின் (NBFC) தொழில்களில் ஈடுபட முடியாது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுரை

ஆன்லைன் கடன் ஆப்கள் குறித்து ரிசர்வ் வங்கிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. இவர்கள் வலையில் சிக்காமல் இருப்பதற்கு, ரிசர்வ் வங்கியின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டு இயங்கப்படும் வங்கிகளிலும், நிதி நிறுவனங்களிலும் மட்டும் மக்கள் கடன் வாங்கும்படி ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்கள் தவறு செய்தால் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும்.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்