ஆப்நகரம்

ஏடிஎம் கார்டு விதிமுறைகள் மாற்றம்.. புது ரூல்ஸ் இதுதான்!

டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கான ஓடிபி விதிமுறைகளை ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது.

Samayam Tamil 17 Jun 2022, 5:22 pm
டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயனாளிகளுக்கான பரிவர்த்தனை விதிமுறைகளை ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. அதாவது, ஓடிபி பாஸ்வோர்ட் (OTP) தேவைக்கான வரம்பை 15000 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது.
Samayam Tamil debit card


பழைய விதிமுறை

இதற்கு முன் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பயனாளிகள் பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது 5000 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைக்கு ஓடிபி தேவையில்லை. 5000 ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைக்கு ஓடிபி அவசியம்.

புதிய விதிமுறை

இப்போது, ஓடிபி தேவைக்கான வரம்பை 15000 ரூபாயாக உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி. இதன்படி, 15000 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைக்கு ஓடிபி தேவையில்லை. 15000 ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைக்கு ஓடிபி கட்டாயம்.

போலாம் ரைட்.. மாஸ்டர்கார்டுக்கு கிரீன் சிக்னல்.. ரிசர்வ் பேங்க் உத்தரவு!
இந்த விதிமுறை உடனடியாக அமல்படுத்தப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்காக ஓடிபி தேவைக்கான வரம்பை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்