ஆப்நகரம்

இதை செய்தால் இந்தியா வளரும்.. ரிசர்வ் வங்கி துணை கவர்னர் பேச்சு!

இந்திய பொருளாதாரம் வளருவதற்கும், உற்பத்தி, ஏற்றுமதியை அதிகரிக்கவும் ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் மைக்கேல் பத்ரா ஆலோசனை.

Samayam Tamil 14 Aug 2022, 9:49 am
ஒடிசா மாநிலம் புபனேஷ்வரில் ரிசர்வ் வங்கி சார்பில் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வு நேற்று நடத்தப்பட்டது. இதில் ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் மைக்கேல் பத்ரா பங்கேற்று பேசினார். அப்போது பொருளாதாரம், உற்பத்தி, ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி அவர் பேசினார்.
Samayam Tamil michael patra


இந்நிகழ்வில் ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் மைக்கேல் பத்ரா பேசியபோது, “இந்தியா தனக்கான வாய்ப்புகளை பயன்படுத்தி சவால்களை கடந்து வந்தால், காலத்தையும் வளைக்கும் என நம்பப்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா 11% வளர்ச்சியை எட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

இதை சாதித்தால் 2048 அல்ல, 2031ஆம் ஆண்டிலேயே உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும். இந்தியாவின் மக்கள் தொகை 138 கோடி. உலகிலேயே இந்தியாதான் இளமையான நாடு. 2023ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 143 கோடியாக உயர்ந்து உலகிலேயே மக்கள் தொகை மிகுந்த நாடாகிவிடும்.

விலைவாசி ஏற்றம் சரிவு.. ஆனாலும் ஒரு பிரச்சினை!
வேலை செய்யக்கூடியவர்களின் எண்ணிக்கை விகிதத்தில் சீனா, பிரேசில், அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளை விட இந்தியா சாதகமான நிலையில் உள்ளது. இந்நாடுகளில், வேலை செய்யக்கூடிய வயதினரின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது.

இந்தியாவில் வேலை செய்யக்கூடிய வயதினரின் எண்ணிக்கை 2030ஆம் ஆண்டுக்குள் சீனாவை தாண்டிவிடும். எனவே, மக்கள் தொகை எண்ணிக்கையின் பலன்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டியது இந்தியாவுக்கான வாய்ப்பு.

ஏற்றுமதியை அதிகரிக்க வலுவான உற்பத்தி அமைப்பு தேவை. மேலும், பழைமையை விட்டுவிட்டு உலகின் மற்ற முன்னணி உற்பத்தியாளர்களுடன் போட்டியிட வேண்டியது அவசியம். இதற்கு தொழில்துறையில் ஆட்டோமேஷன், தகவல் பரிமாற்றம், சைபர் ஃபிசிகல் சிஸ்டம், கிளவுட் கம்பியூட்டிங், ஸ்மார்ட் ஃபேக்டரில், ரொபோட்டிக்ஸ் போன்றவை அவசியம்.

இரண்டாவதாக, இந்தியா திறன்வாய்ந்த தொழிலாளர் சக்தியை உருவாக்க வேண்டும். இதற்கு மனிதவள மூலதனத்தில் அதிகம் முதலீடு செய்ய வேண்டும். சர்வதேச அளவில் போட்டித்தன்மையை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும்” என்று பேசினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்