ஆப்நகரம்

கொரோனா 2ஆம் அலை.. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி போட்ட உத்தரவு!

கொரோனா இரண்டாம் அலை சூழலை எதிர்கொள்ள வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 24 Apr 2021, 7:47 pm

ஹைலைட்ஸ்:

  • கொரோனா இரண்டாம் அலை நெருக்கடி
  • வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil RBI
கொரோனா இரண்டாம் அலையை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. இந்த சூழலில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதில், கொரோனா சூழலில் எதிர்பாரா இழப்புகளை சமாளிப்பதற்காக மூலதனம் திரட்டி பாதுகாக்கும்படி வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
கொரோனா நெருக்கடி காலத்தில் வங்கிகளின் மூலதனத்தை பாதுகாப்பதற்காக டிவிடெண்ட் கட்டணங்களை (divident payouts) 50 விழுக்காட்டுக்குள் வைத்துக்கொள்ளும்படி அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

அனைத்து வர்த்தக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு இந்த உத்தரவை ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ளது. நாட்டில் கொரோனா இரண்டாம் அலையால் ஏற்பட்டுள்ள அசாத்திய சூழலில் வங்கிகள் மூலதனத்தை திரட்டி பாதுகாக்க வேண்டியது அவசியம் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்