ஆப்நகரம்

வங்கியில் ரூ.1000 மட்டுமே எடுக்கலாம்.. ரிசர்வ் பேங்க் உத்தரவு!

வங்கியில் வாடிக்கையாளர்கள் 1000 ரூபாய் வரை மட்டுமே எடுக்க முடியும் என ரிசர்வ் வங்கி தடை.

Samayam Tamil 21 May 2022, 2:50 pm
பல்வேறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், வங்கி சேமிப்புக் கணக்கில் இருந்து 1000 ரூபாய் மட்டுமே எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி தடையை நீட்டித்துள்ளது குறிப்பிட்ட ஒரு வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil rbi extends restrictions on deccan urban cooperative bank till august 19th 2022
வங்கியில் ரூ.1000 மட்டுமே எடுக்கலாம்.. ரிசர்வ் பேங்க் உத்தரவு!


​வங்கிகளுக்கு தடை

நிதிநிலை மோசமாக உள்ள வங்கிகள், வருமானம் ஈட்டுவதற்கு வழியில்லாத வங்கிகள் மற்றும் போதிய மூலதனம் இல்லாத வங்கிகளிடம் இருந்து வாடிக்கையாளர்களை பாதுகாப்பதற்காக பல்வேறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளையும், தடையையும் அமல்படுத்தி வருகிறது.

​தடை நீட்டிப்பு

மே 19ஆம் தேதியுடன் ரிசர்வ் வங்கியின் தடை முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை தடையை மேலும் நீட்டித்து ரிசர்வ் வங்கி உத்தரவு வெளியிட்டுள்ளது. இதன்படி, வங்கிக்கும், வாடிக்கையாளர்களுக்கும் என்னென்ன தடைகள் விதிக்கப்பட்டுள்ளது?

​இந்த வங்கிக்கும் தடை

கர்நாடக மாநிலத்தில் உள்ள டெக்கன் நகர்ப்புற கூட்டுறவு வங்கி (Deccan Urban Cooperative Bank) வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்குகளில் இருந்து அதிகபட்சமாக 1000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

​1000 ரூபாய் மட்டுமே

டெக்கன் நகர்ப்புற கூட்டுறவு வங்கியின் வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்கில் இருந்து அதிகபட்சமாக 1000 ரூபாய் மட்டுமே பணம் எடுக்க முடியும்.

​கடன் வழங்க தடை

டெக்கன் நகர்ப்புற கூட்டுறவு வங்கி புதிதாக கடன்களை வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பழைய கடன்களை புதுப்பிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

​டெபாசிட்டுகளுக்கு தடை

புதிதாக டெபாசிட்டுகளை டெக்கன் நகர்ப்புற கூட்டுறவு வங்கி ஏற்பதற்கும் ரிசர்வ் வங்கி தடை விதிக்கப்பட்டுள்ளது.

​முதலீடுக்கு தடை

இதுபோக டெக்கன் நகர்ப்புற கூட்டுறவு வங்கி புதிதாக முதலீடு செய்வதற்கும் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்