ஆப்நகரம்

ஆன்லைன் கடன் ஆப்களுக்கு ஆப்பு.. ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு!

ஆன்லைன் கடன் ஆப்களுக்கு ஒழுங்குமுறை அமைப்பை கொண்டுவரப்போவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Samayam Tamil 9 Jun 2022, 6:13 pm
அண்மைக்காலமாக ஆன்லைன் கடன் ஆப்களின் அராஜகம் அதிகரித்துவிட்டது. எந்தவொரு ஒழுங்குமுறையும் இல்லாமல் ஏராளமான ஆன்லைன் கடன் ஆப்கள் செயல்பட்டு வருகின்றன.
Samayam Tamil Online loan apps


இந்த ஆன்லைன் கடன் ஆப்கள் சிறு, சிறு கடன்கள் வழங்குகின்றன. அதிலும் பெரிய பங்கை கட்டணம் என்ற பெயரில் வசூலித்துக்கொள்கின்றனர். அதிக வட்டியும் விதிக்கின்றனர். கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால் கடன் வாங்கியோரை துன்புறுத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

ஆன்லைன் கடன் ஆப்களால் துன்புறுத்தப்பட்டு தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எனவே, ஆன்லைன் கடன் ஆப்களை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கும், மத்திய அரசுக்கும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

நகை கடன் முழுமையாக தள்ளுபடி.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
இதேபோல, ஆன்லைன் கடன் ஆப்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆன்லைன் கடன் ஆப்களை ஒழுங்குபடுத்த இருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்தா தாஸ் இன்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “டிஜிட்டல் கடன் ஆப்களில் பெரும்பாலானவை அங்கீகரிக்கப்படாத, பதிவு செய்யப்படாத, சட்டவிரோதமானவை. டிஜிட்டல் கடன் ஆப்களால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதற்காக விரிவான ஒழுங்குமுறை அமைப்பை கொண்டுவருவோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஆன்லைன் கடன்களை ஆப்களை பயன்படுத்தும் முன் அவை ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்யப்பட்டவையா என்பதை சரிபார்க்கும்படி அவர் அறிவுறுத்தியுள்ளார். ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்த ஆப்கள் தவறு செய்தால் நிச்சயமாக ரிசர்வ் வங்கி குறுக்கிட்டு நடவடிக்கை எடுக்கும் என அவர் உறுதியளித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்