ஆப்நகரம்

அதானி கடன்.. ஒரு வாடிக்கையாளரால் ஆபத்து இல்லை.. ரிசர்வ் வங்கி கவர்னர் பதில்!

அதானிக்கு வங்கிகள் வழங்கிய கடன்கள் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்தா தாஸ் பதில்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 8 Feb 2023, 4:24 pm
அதானி குழுமம் மீது மோசடி குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது தேசிய அளவில் மட்டுமல்லாமல் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதானி குழுமத்துக்கு எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத் துறை வங்கிகள் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Samayam Tamil shaktikanta das
shaktikanta das


இந்நிலையில், ஒரே ஒரு வாடிக்கையாளரால் இந்தியாவின் வங்கி துறை வீழ்ந்துவிடாது எனவும், நாட்டின் வங்கி துறை பலமாக இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்தா தாஸ் இன்று தெரிவித்துள்ளார்.

அதானி குழுமம் கணக்கு மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் ஆய்வு நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை ஜனவரி 24ஆம் தேதி வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, பங்குச் சந்தையில் அதானி நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்தன.

இதுமட்டுமல்லாமல், அதானி நிறுவனங்களின் கடன் பத்திரங்களின் மதிப்பும் சரிந்துவிட்டது. அதானி நிறுவனங்களின் பத்திரங்களை பிணையாக ஏற்க முடியாது என கிரெடிட் சூயிஸ், சிட்டிகுரூப், ஸ்டாண்டர்ட் சார்டர்ட் ஆகிய சர்வதேச வங்கிகள் முடிவு செய்துள்ளன.

இதுமட்டுமல்லாமல், அதானி குழுமத்துக்கு எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத் துறை வங்கிகள் நிறைய கடன்களை வழங்கியுள்ளதாகவும், எல்ஐசி நிறுவனம் அதானி நிறுவனங்களில் நிறைய முதலீடு செய்துள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்தா தாஸ் அளித்த பதிலில், ஒரே ஒரு வாடிக்கையாளரால் இந்திய வங்கி துறை கீழே வீழ்ந்துவிடாது எனவும், நாட்டின் வங்கித் துறை பலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், திட்டங்களின் அடிப்படையிலேயே வங்கிகள் கடன் வழங்கியுள்ளதாகவும், நிறுவனத்தின் சந்தை மதிப்பு அடிப்படையில் கடன்கள் வழங்கப்படவில்லை எனவும் சக்திகந்தா தாஸ் தெரிவித்துள்ளார்.

அதானி நிறுவனங்களில் எல்ஐசி நிறுவனம் 30,127 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது. மேலும் அதானி குழுமத்துக்கு எஸ்பிஐ வங்கி 27000 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளதாக எஸ்பிஐ தலைவர் தினேஷ் குமார் காரா தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்