ஆப்நகரம்

ஆன்லைன் பணப் பரிமாற்றத்திற்கு இனி கட்டணம் இல்லை; ரிசர்வ் வங்கி அதிரடி ஆரம்பம்!

வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆன்லைன் பணப் பரிமாற்றத்திற்கான கட்டணத்தை ரிசர்வ் வங்கி நீக்கியுள்ளது.

TIMESOFINDIA.COM 6 Jun 2019, 1:29 pm
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், RTGS மற்றும் NEFT ஆகிய ஆன்லைன் பணப் பரிமாற்றத்திற்கு வங்கிகள் வசூலிக்கும் குறைந்தபட்ச கட்டணம் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. டிஜிட்டல் பணப் பரிமாற்றத்திற்கு உத்வேகம் அளிக்கும் வண்ணம், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Samayam Tamil RBI GOvernor


இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் ஒருவாரத்திற்குள் வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இதனை அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும். பொதுமக்களிடையே ஏடிஎம் பயன்பாடு மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது.

வங்கிகளுக்கான வட்டி விகிதக் குறைப்பால் கடன் மீதான மாதத் தவணை குறையுமா?

இந்த சூழலில் ஏடிஎம் பயன்பாட்டிற்கான கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. இதற்காக இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் தலைமை செயல் அதிகாரிகள், பங்குதாரர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழு கட்டமைக்கப்பட்டு தீர்வு காணப்படும்.

இந்தக் குழு முதல் கூட்டம் நடத்தி, இரண்டு மாதங்களுக்குள் தங்கள் கோரிக்கைகளை சமர்பிப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரெபோ வட்டி விகிதத்தை 25 புள்ளிகள் குறைத்து, 5.75%ஆக ரிசர்வ் வங்கி குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக எடுக்கப்படும் குறைப்பு நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்