ஆப்நகரம்

EMI: இன்னும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு?

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மாதத் தவணை செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று எஸ்பிஐ ஆய்வு கூறியுள்ளது.

Samayam Tamil 19 May 2020, 11:44 am
இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்காமல் தடுக்க மார்ச் 24ஆம் தேதியிலிருந்து 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது மத்திய அரசு. பொதுமக்கள் வெளியே வருவது கட்டுப்படுத்தப்பட்டது. அத்தியாவசியப் பொருட்கள் தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும், தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டன. இதுபோன்ற காரணங்களால் மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. வழக்கமான ஊதியம் கிடைக்காத சூழல் ஏற்பட்டதால் வங்கிகளில் வாங்கிய கடனைச் செலுத்துவது, ஈஎம்ஐ கட்டணங்களைச் செலுத்துவது கடினமானதைக் கருத்தில் கொண்டு, வங்கிகளில் கடன் பெற்றவர்கள் மாதத் தவணை செலுத்துவதற்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்படுவதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது.
Samayam Tamil emi moratorium


இந்த அறிவிப்பின்படி, மார்ச் 1 முதல் மே 31 வரையில் ஈஎம்ஐ செலுத்துவதிலிருந்து கடனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. கொரோனா தீவிரம் அதிகரித்து வந்த நிலையில் மூன்றாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 31 வரையில் ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அதைத் தாண்டியும் நீட்டிக்கப்படலாம் என்ற அச்சம் மக்களிடையே இருக்கிறது. எனவே, ரிசர்வ் வங்கி அளித்துள்ள 3 மாத ஈஎம்ஐ அவகாசம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்று எஸ்பிஐ ரிசர்ச் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை: நகை வாங்க நல்ல நேரம்!

வங்கிக் கடன் செலுத்துவதற்கான தவணைக் காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியிடம் முறையிட்டுள்ளன. இதைத் தொடர்ந்து வங்கிகள், வங்கியல்லா நிதி நிதி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு நிதி அமைப்புகளுடன் ரிசர்வ் வங்கி இதுகுறித்து ஆலோசனை செய்துள்ளது. தற்போது ஊரடங்கு காலம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ரிசர்வ் வங்கி ஈஎம்ஐ தவணை நீட்டிப்பு குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் விலை இன்னைக்கு எப்படின்னு நீங்களே பாருங்க!

எனினும், இச்சலுகை நீட்டிப்பால் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் சுமை ஏற்படும் எனவும் கருதப்படுகிறது. ஏற்கெனவே மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், மேலும் நீட்டிக்கப்பட்டால் ஆறு மாதங்கள் கழித்து பெரிய அளவிலான தொகையை வாடிக்கையாளர்கள் வட்டித் தொகையாகச் செலுத்த வேண்டியிருக்கும் எனவும், வட்டித் தொகை செலுத்துவதற்குத் தாமதம் ஆவதால் கூடுதல் வட்டி செலுத்த வேண்டியிருக்கும் எனவும் வங்கி வட்டாரங்களில் கூறப்படுகிறது. இருப்பினும் மக்கள் தரப்பில் தற்போதைய நிதி நெருக்கடிச் சூழலைப் பார்க்கும்போது தவணைச் செலுத்த கூடுதல் அவகாசத்தையே எதிர்பார்க்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்